மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

கடுதாசி வந்தது !
 இப்படியே போனால் ....
       மாரிக்கு    கறி சோறாம்!
இது கெடா வெட்டி வச்ச
      மாரியாத்தா படையல் அல்ல
பட்டினிக்காக கழுவேறிய
      பிச்சையின் ஆத்தாவுக்காக
 யாராம் அவள் ?
      முட்டுச்சந்து   மூலையில்
 கட்டில் கடை போட்ட மாரி
 எனக்கோ
      சவ்வு மிட்டாய் கிழவி !
 இன்னும் உப்பு மாங்காய்
     முந்திரி பழம் வெள்ளரி என
பள்ளி நேரத்து சிற்றுண்டி சாலை
அங்கு மட்டும்
      கடன் அன்பை  முறித்ததில்லை!
பாசக்கார கிழவி ...
      படித்த மாத்திரத்தில்
மனதில் எரிமலை ....?
திங்களன்று  சேதி வந்தது
    மாரி கிழவி இறந்தே விட்டாளாம்
 கறி சோறு  தின்று அல்ல ..


    கஞ்சி தண்ணி குடிக்காமல்
கண்மூடி  தவமிருந்து
    கடைசி மூச்சை விட்டாளாம்
 வடக்கிருத்தல் என்றால்
    வடக்கு பார்த்துதான்  என்றில்லை !


                        இன்றைக்கும் மதுரை மாவட்டத்தின்   ஒதுக்குபுற   கிராமங்களில் வயசாளிக்கு கறி சோறு  வைக்கும் பழக்கம் உள்ளது.  கறி விருந்து பற்றி தெரிய வேண்டுமெனில்  விசாரித்து  தெரிந்து கொள்ளுங்கள் .   என்னை    கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று  சொல்லுவேன் .






 
      

2 comments:

This comment has been removed by a blog administrator.

அன்பின் சாகம்பரி - மனம் வலிக்கிறது - வடக்கிருத்தல் இன்னும் கிராமப்புறங்களீல் முதியவர்களால் கடைப்படிக்கப்படுகிறது. என்ன செய்வது ..... சவ்வு மிட்டாய்க் கிழவி, உப்பு மாங்காய், வெள்ளரி, முந்திரிப்பழம், எனப் பள்ளியின் சிற்றுண்டிச்சாலை - அடடா - அநத நாள் ஞாபகம் வந்ததே ! வந்ததே! - கொசு வத்தி சுத்த வச்சீட்ட்டீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா