கடுதாசி வந்தது !
இப்படியே போனால் ....
மாரிக்கு கறி சோறாம்!
இது கெடா வெட்டி வச்ச
மாரியாத்தா படையல் அல்ல
பட்டினிக்காக கழுவேறிய
பிச்சையின் ஆத்தாவுக்காக
யாராம் அவள் ?
முட்டுச்சந்து மூலையில்
கட்டில் கடை போட்ட மாரி
எனக்கோ
சவ்வு மிட்டாய் கிழவி !
இன்னும் உப்பு மாங்காய்
முந்திரி பழம் வெள்ளரி என
பள்ளி நேரத்து சிற்றுண்டி சாலை
அங்கு மட்டும்
கடன் அன்பை முறித்ததில்லை!
பாசக்கார கிழவி ...
படித்த மாத்திரத்தில்
மனதில் எரிமலை ....?
திங்களன்று சேதி வந்தது
மாரி கிழவி இறந்தே விட்டாளாம்
கறி சோறு தின்று அல்ல ..
கஞ்சி தண்ணி குடிக்காமல்
கண்மூடி தவமிருந்து
கடைசி மூச்சை விட்டாளாம்
வடக்கிருத்தல் என்றால்
வடக்கு பார்த்துதான் என்றில்லை !
இன்றைக்கும் மதுரை மாவட்டத்தின் ஒதுக்குபுற கிராமங்களில் வயசாளிக்கு கறி சோறு வைக்கும் பழக்கம் உள்ளது. கறி விருந்து பற்றி தெரிய வேண்டுமெனில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் . என்னை கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று சொல்லுவேன் .
Popular posts
- இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.
- கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி
- பிரச்சினைகளை கையாளுதல்-2
- குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1
- நான் ஒரு விண்மீன் குஞ்சு
- குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு
- அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
Labels
- . வலைப்பூவின் அழைப்பு (1)
- அம்மா (12)
- அனுபவம் (1)
- இனிய இல்லம் - கட்டுரை (28)
- கடிதம் (7)
- கட்டுரை (10)
- கவிதை (55)
- சிறுகதை (2)
- பதிவுலகம் (3)
- பிள்ளைகள் வளர்ப்பு (8)
- மனவள கட்டுரை (24)
- முதியோர் (23)
- முதியோர் நல கட்டுரைகள் (7)
- முதியோர் நல சட்டம் (1)
- வாழ்வியல் கவிதைகள் (15)
வாசிப்பகம்
-
-
Digest, adjust, accept3 days ago
-
தேர்தல்...1 week ago
-
உலகின் தொன்மையான மழைக்காடு1 week ago
-
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!2 months ago
-
வெகுமதி7 months ago
-
-
-
-
-
-
-
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...7 years ago
-
தலையுடன் தலைநகரில் :7 years ago
-
இதுவும் பெண்ணியம்8 years ago
-
அம்மா துணை !!8 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்8 years ago
-
-
கவிழாய் செம்பிழம்பே!!!9 years ago
-
உலக சமையல் 1 ~ பயையா...10 years ago
-
ஏனோ உறக்கமில்லை எனக்கு...11 years ago
-
Social Icons
About Me
- சாகம்பரி
- என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.
Powered by Blogger.
Featured Posts
நண்பர்கள்
Posted by
சாகம்பரி
Tuesday, December 21, 2010
Labels:
முதியோர்,
வாழ்வியல் கவிதைகள்
2 comments:
- This comment has been removed by a blog administrator.
-
அன்பின் சாகம்பரி - மனம் வலிக்கிறது - வடக்கிருத்தல் இன்னும் கிராமப்புறங்களீல் முதியவர்களால் கடைப்படிக்கப்படுகிறது. என்ன செய்வது ..... சவ்வு மிட்டாய்க் கிழவி, உப்பு மாங்காய், வெள்ளரி, முந்திரிப்பழம், எனப் பள்ளியின் சிற்றுண்டிச்சாலை - அடடா - அநத நாள் ஞாபகம் வந்ததே ! வந்ததே! - கொசு வத்தி சுத்த வச்சீட்ட்டீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Subscribe to:
Post Comments (Atom)