மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ரௌத்திரம் பழகுவீர் 

பக்கத்து இருக்கை பரமன் 
    சிரித்த முகம் இல்லையென்றாலும்   
தனித்து நில்லாத சிநேகபாவம் 
    வந்ததும் எனக்கான புன்னகையுண்டு 
ஆனல் இன்று....
    குறைந்த மின்னழுத்தம் போல  
கொஞ்சம் இருள் சூழ்ந்த முகம்,
    என்னவாயிற்று ....?

 
இடைவேளையில் பதில் வந்தது
     சின்ன மகனுடன் சண்டையாம்
எதற்கோ என்னவோ சொல்லப்போக  
    "எதற்காக பெற்றீர்கள்?" என்றானாம் 

-சித்தாந்த சமயநூல்களை
      கரைத்து குடித்தபின்னல்லவா
இதற்கெல்லாம் பதில் கிட்டும- 
    பதில் தரமுடியாமல் சினம் காத்தால்..

 
அதே கேள்வி மறு ஒலிபரப்பானது 
    பேரனை ஆதரித்த தாத்தாவினால்
சினம் செல்லிடத்து காக்கபட்டது
   அல்லிடத்து காக்கப்படவில்லை

கூரிய வார்த்தைகள் அம்பானதோ...
    முள்ளானதோ... ஊசியாக தைத்ததோ?
அவ்விடத்தில் உருவானது 
    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம


அவரும் பே...சியிருக்கலாம்...
    அதைவிடுத்து அதென்ன பார்வை!
இமயமலை தவசி போலவே,
    அம்மா இருந்திருந்தாலாவது.....
அவருக்கும் அதே நினைப்புதானோ!
    மதிக்க ஆள் இருந்தால்தானே  மகாராஜா!
அப்பா அடிக்கடி சொல்லுவதுதான்.

பரமன் பெற்றவரிடத்தும் பெரியவரிடத்தும்
    மரியாதை தரும் மதிப்பானவர்தான்
கேட்டால், நிலைதடுமாறிவிட்டராம்
    இப்போதும்தான்.. குரலே  மாறுகிறது
மதிய விடுப்பு எடுத்து மன்னிப்பு கேட்டால்?
    அந்தவேளையில் அலைபேசியின் அழைப்பு 

அலைபேசியின் அந்தப் பக்கம்...
   அவரேதான் ... பரமனின் அப்பா!
பேரனை பெரியவராய் ஆதரிக்கவேண்டி
   அவரும் செல்லிடத்து காக்கவில்லையாம் 

இப்போது மன்னிப்பானது சமநிலையானது.
   இதுதான் ரௌத்திரம் பழகுதல்! 

சினம், சமாதானம், மன்னிப்பு பழகுவீர்!
     
               
                    

 

 

             

3 comments:

This comment has been removed by a blog administrator.

என்னுடைய முந்தைய மறுமொழி நீக்கப்ப்ட்டு விட்டதே ! ஏனெனத் தெரிந்து கொள்ளலாமா

வணக்கம் ஐயா, அதுதான் நீங்கள் முதலில் இட்ட மறுமொழி. நான் எப்போதும் செட்டிங்ஸில் இருக்கும் கமெண்டைதான் பார்ப்பேன். அப்போது ப்ளாக்கை கையாளுவதில் எனக்கு பரிட்சம் இல்லாததாலும், இணைய வேகம் குறைந்துபோய் லாக் ஆகிவிட்டது. மவுஸை அழுத்தமாக க்ளிக் செய்ததில் delele pressஆகிவிட்டது. வேறு யாராக இருந்தாலும் தொடர்பு கொண்டு மறுபடியும் கருத்துரையிட செய்திருப்பேன். மதிப்பிற்குரிய உங்களை
தொந்தரவு செய்ய விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.