மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 " நலமா நண்பரே? எப்போது வந்தீர்கள்?
         அங்கே வசதி எப்படி உள்ளது? "
அர்ஜுனனின் கணைகளாய்      
    சிவராமனின் கேள்விகள்.
உண்மையில் அவரின் ஆசை
        எதிர்பதமான பதில்கள்தான்!
வார்த்தைகள் புரிவதைவிட
       கண்கள் அதிகம் பேசியது
வரதுவிற்கும் அது புரியும்
       பேத்திக்கு பிறந்த நாள் விழா!
அவருக்கும் அழைப்பு வந்தது
     ஆவலாக வந்தால் அவலாக்குகிறார்
        
இந்த வா...ரம்... வரதுதானோ...?
       இருக்காதா பின்னே... 
அவர் அயல்நாடா சென்று வருகிறார்?     
     அனாதை இல்லத்திலிருந்தல்லவா...
- இல்லை இல்லை....
      இந்த வரிகளை வரதுவிற்கு 
தெரியப்படுத்த வேண்டாம்!
       (இது சிவராமனின் உபயம் ) 
து முதியோர் இல்லமாம்..
       மறுபடியும் மன்னிக்கவும் ... 
வசதியானவர்கள் வசிக்கும்
      ஒய்வு இல்லம் என்று சொல்லுவார்.  -
 

தனக்கென சேர்த்த பணத்தையும்
        இருப்பதாக நினைத்துக் கொண்ட
தன்மானத்தையும் செலவழிக்கிறார்
       அவர் இப்படியென்றால் மகன் அப்படி
இருவரின் உள்ளத்து இடைவெளியில் 
        இல்லத்து வியாபாரி நலமோ நலம்.

முகம் பார்த்து நிற்கும்
      சிவராமனுக்கு பதில் வேண்டுமாம்
"காலை தேநீர், அற்புதமான உணவு,
      படிக்க புத்தகங்கள், சுகமான காற்று 
ஆழ்ந்த உறக்கம், வசதிதான்... "
       உள்ளே ரத்தம் வழிந்தாலும் 
எதிரியின் கண்களில் ஏமாற்றம்
      சொன்ன வார்த்தைகளுக்கு
சற்றும் தொடர்பில்லாத உண்மை
      தொண்டைவரை வலித்தது.
 மாத கட்டணம் வசசூலிப்பவருக்கு
      மனதின் எதிர்ப்பார்ப்பு தெரியுமா?  

உறக்கம்வர கட்டாய மாத்திரைகள்
      உப்பில்லாத உணவு - பத்தியமாம்  
 சருகுகள்  செத்துப்போன சத்தம்
      தட்டாம் பூச்சியின்  வெற்று சிறகுகள்
மொட்டுகள் இல்லாத தோட்டம்
      சிரிக்க மறந்த நாட்கள் .....!
பக்கத்து படுக்கை சதாவின்
      இறுதி நாட்கள் இன்னமும் வலி
சுவாசிக்ககூட நுரையீரலுக்கு பயம்
     வெளியே விட்ட காற்று திரும்பாதோ ..?
 இருந்தாலும்............?

வாழ்க்கை வியாபாரத்தில்
       வெற்று கை வீச பயந்து 
காற்று குமிழ்களுடன் ஒப்பந்தம்!
       மறுபடியும் காடாள சென்றார் .

2 comments:

melay sonna kavidhai miga pirammadam.idai paditha vudan enakku indru parthadai solla vendum ena aarvam .indru kalai sun tv programme il siru kulandai than thai kastta pattu padikka vaipathai parri pesiyadu...paesiya vaikku padippu naal mudiyum varai akkulandaikku oru mahaan udavi saiya mun vanduvittar.perra thaikku viduvu pirandadu.periyavargalukku udavi saiya ninaithal nalla vazhiyil ethanaiyo vidathil udavi saiyelam.innum neraya manavargalukku perrorgalin kastangal therivadillai.valarndu periyavargal agum varai udavi perru, than sonda kaalil ninrapin,mudiyor illathukku thalluginranar..innum vizhippunarchi thevai...muthiyavargalai madippadu parriyum,periyavargalidam nadandukolvadaiparriyum.

அன்பின் சாகம்பரி - இன்றைய காலகட்டத்தில் - பெற்றவர்களை இல்லத்திற்கு அனுப்புவது சர்வ சாதாரணமாகி விட்டது. காரணம் பல ..... என்ன செய்வது - நல்ல சிந்தனையில் எழுதப்பட்ட நற்கவிதை. - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா