மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


        நாம் சார்ந்து இருக்கும் சமுதாயத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். பெண்ணடிமைத்தனம் என்று சொல்லப் படுகின்ற கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். விதிக்கப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையை ஆராய்ந்தால், அது கட்டுப்பாடு அல்ல பாதுகாப்பு என்பதை உணரமுடியும். ஆண் சார்ந்த சமுதாயமாக கருதாமல் பெண்ணை மதிக்கிற சமுதாயமாக நாம் கருதவேண்டும்.
பெண்களுக்காக

         வெறும் பிள்ளைபெறும் இயந்திரம் அல்ல பெண்கள் என்று கடினமாக நினைக்காமல் பிள்ளை பெறுவதனால் சில சலுகைகள், கட்டுப்பாடு என்கிற போர்வையில் கிட்டின. இப்போதைய உலகத்தில் குழந்தை பேறு முடித்த பெண்களுக்கு போதுமான ஓய்வு கிடப்பதில்லை. மேலும் சுமைகூடிவிட்டது. காதல் என்ற பெயரில் அன்பு மழையில் நனைந்து திருமணம் முடித்து குழந்தை பிறந்ததும் சிறிய ஓய்விற்குப்பின் திரும்பவும் தங்கள் பணியை தொடரும்போது வாழ்க்கை வறட்சியாகி போய்விடுகிறது. உடம்பிற்கும் ஏதாவது வந்து படுத்தி எடுப்பதில் முற்போக்குவாதியாக தோன்றிய கணவன் மீது கவனம் குறையத்தான் செய்கிறது. எப்படி பிள்ளைப்பேறு பெண்களிற்கு மறுபிறப்போ அது போல பிள்ளை பேற்றை தொடரும் காலங்கள் கணவனுக்கு சோதனையான நேரம்தான் இதில் தேர்வு பெற்றுவிட்டால், பிறகு வாழ்க்கை வெற்றி முகம்தான்.

  மிகச்சரியாக இந்த காலக்கட்டத்தை கடப்பவர்கள் , மனைவியின் அன்பிற்குரியவர்களாக நிரந்தர நியமனம் செய்யப்படுவார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்த பதிவில் ......

0 comments: