மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


தொடர்ச்சி......
முதலில் வேலைக்குச் செல்லும் நகரத்துப் பெண்களின் நிலை:
பெண்கள் படித்து வேலைக்குச் சென்று வீட்டை மட்டுமல்ல நாட்டையும் உயர்த்துகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். வேலைக்கு செல்வதற்கான காரணங்கள்:
1. குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த. இன்றைக்கு ஒருவரின் வருமானத்தில் குடும்பத்தின் அடிப்படை செலவுகளை சமாளிக்க முடிந்தாலும் , குழந்தைகளின் கல்வி ,திருமணம் போன்ற பெரிய தேவைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.
2. தொழிற்கல்வி படித்துவிட்டு வீட்டில் இருப்பது நாட்டிற்கும் சேர்த்தே கேடு என்பதால்
3. சில குடும்பங்களில் பெண்களின் வருமானம் வீட்டிற்கு மிக அவசியம் என்பதால்
4. பொருளாதார பிரச்சினை இல்லையென்றாலும் , "வீட்டில் இருந்தால் எனக்கு மனக்குழப்பம் அதிகமாகி விடுகிறது" என்று தன்னை நிகழ்காலத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேலை தேவைபடுகிறது.
1,2, மற்றும் நான்காம் பிரிவினர் திறமையாய் இருந்தால் போதும், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த மூன்றாம் பிரிவினர் என்ன திறமையாய் இருந்தாலும் மரியாதை கிட்டுவதில்லை. அவள் வருமானத்தை நம்பி அவள் குடும்பம் இருப்பதால், அதிகப்படி வேலை, குறைந்த ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர் நோக்க வேண்டி இருக்கும். ஆனாலும் உயர்பதவியில் இல்லாத பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில துறைகளை தவிர்த்து பெண்களின் வேலை அவர்களுக்கு சுமையாகவே உள்ளன.

ஆசிரியப்பணி, மருத்துவத்தொழில் போன்ற பிரசித்தி பெற்ற தொழில்களின் பிரச்சினைகளை மட்டும்தான் குடும்பத்தாரால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவற்றின் தாக்கத்தையும் அவை தரும் மன அழுத்தத்தையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் குடும்பத்தில் வேறு பிரச்சினகள் உருவாகும். ஒரு கடுமையான நாளின் வேலைப் பணியை முடித்து வீடு திரும்பும் பெண்ணிற்கு உறவுகளின் புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. நிம்மதியான உறக்கம்கூட மறுக்கப்படுகிறது. அப்போது ஆதங்கமாக உணர்ந்தாலும் தொடர்ந்து வரும் நாட்களின் ஓட்டத்தில் மறந்துவிடும். நிற்க வைத்து இது பற்றி கேள்விகேட்டால்கூட பதில் சொல்லும் மன நிலை அவர்களிடம் இருக்காது. அவர்களுக்கு மரியாதையையும் மன நிம்மதியையும் பெற்றுத்தருவது யார் பொறுப்பு? உண்மையில் அவர்கள்தான் இன்று வாழ்த்தவேண்டும்.


கிராமத்துப் பெண்களின் நிலை வேறு. குடும்ப வரவு செலவுகளை கையில் வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக குடும்பத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டவர்களை விட்டுவிடலாம். பெரும்பாலான உரிமைகள் மறுக்கப்படுவது இளம் பெண்களுக்குத்தான். படிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடு விதிப்பது ஒரு பக்கம் என்றால் இன்னமும் கிராமத்தில் காதல் பிரச்சினையில் "கௌரவக்கொலைகள்" நடைபெறுகின்றன. வீட்டின் மரியாதை பெண்ணின் கையில் உள்ளது என்றால் முதல் மரியாதை பெண்ணுக்குத்தானே கிட்டவேண்டும், அப்படி இல்லை. மரியாதை குறைதல் இல்லையென்றாலும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடம் இல்லை. இதை தருபவர்களுக்குத்தான் வாழ்த்தும் உரிமையும்.

0 comments: