மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பூமியின் எல்லை தேடி
குளிர்ச்சியை உணர்ந்த
                   முதல் சுவாசம்
மாலை சந்திரனின்
வெளிச்சமாய் தாய் முகம்
                  முதல் பசி தீர்த்தது
காலை பகலவனின்
பரிவாய் தந்தையின்
                  முதல் ஸ்பரிசம்

மழையாய் ஓடையாய்
            அருவியாய் நதியாய்
என்னை நனைக்கும் பின்
             உலர்த்தும் உறவுகள்
ஆலமரத்து கிளைகளின்
            அன்றில் பறவைகள்!


சமயத்தில் இடி இடிக்கும்
          சூறாவளி சுழன்றடிக்கும்
அனலாக வெயிலடிக்கும்
           கடல் கரைதாண்டி
 தரை தொடலாம்....
சில வேளை நான்
காணமலும் போகலாம்!

ஆனால்
என்னை மீட்டெடுக்கும்
எனக்கான என் உலகம்!


4 comments:

அருமை... அருமை...

நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்

கலக்கல்.....

மிக்க நன்றி திரு.மனோ