மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

கொஞ்சம் யோசிக்கவுமே
தவறு புரிந்து போனது

எப்படி பொறுத்து கொள்வது
தவறு மனதிற்கு பட்டபின்
திருத்துதல் கடமை


வேதியியல் மாற்றம்
மூளைக்குள் உருவாகி
வயிற்றுக்குள் இறங்கி
ஒரு பேரலை உருவானது
எத்தனை பயிற்றுவித்தும்
பொறுமை மறந்து போய்
எண்ணங்கள் ஒலியாயின
வார்த்தைகள் ஏவுகணையாய்
இலக்கினை தாக்கின

எதிர்புறமோ எதிர்ப்பின்றி
வரவர வாரிக்கொள்ளும்
நுரையலை கடலானது
அகராதியில் உள்ள
அத்தனை வசை பாடலும்
முடிந்த பின்னும்
பரிதாபமான பார்வை
ஆனாலும்.....
ஏன் இப்படி கேசம் கலைந்து...

சிவந்து போன கண்கள்...
கண்ணாடியில் என் முகம்
கலங்கித் தெரிந்தது

எனக்கு மட்டுமே புரிந்த
என் தவறு வெளியில்
தெரியாத சில சமயம்
இப்படித்தான் ஆகிறது
தவறு செய்த நான்
கண்ணாடிக்குள் நிற்க
மனசாட்சி நீதிபதியாக
மறுக்க முடியாத
தீர்ப்பு சொல்லத் தயாரானது!


15 comments:

தவறுகள் என்பது அடுத்த வருக்கு தெரியாது என்ற தோரணையில் தான் இந்த உலகமே தவறு செய்துக் கொண்டிருக்கிறது...

ஆனால் அது நம் மனசாட்சிக்கும்.. கடவுளுக்கும் தெரியும் என்ற உண்மை தெரியாமல்..

கவிதை படைப்பு அருமை..

உண்மைதான். திரு. சௌந்தர். கருத்துரைக்கு நன்றி.

அட பிரமாதம் போங்க. அசத்திடீங்க. உண்மைலேயே நல்லா இருக்கு.

தவறு செய்த நான்
கண்ணாடிக்குள் நிற்க
மனசாட்சி நீதிபதியாக
மறுக்க முடியாத
தீர்ப்பு சொல்லத் தயாரானது!
மன சாட்சியின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றேயாக வேண்டும்.

நம் மனதிற்கு நாம் செய்தத் தவறு தெரியும். உறுத்திக்கொண்டே இருக்கும்

மனசாட்சிதான் கடவுளோ என்று நான் யோசிப்பதுண்டு.நன்று

வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.செந்தில்.

poetical justice என்று ஆங்கிலத்தில் இதனை சொல்வார்கள். நன்றி ராஜேஸ்வரி.

கருத்துரைக்கு நன்றி திரு.எல்.கே

சரியாக சொன்னீர்கள். நின்று கொல்லும் மனசாட்சி என்பார்கள். நன்றி திரு. சண்முகவேல்.

யதார்த்தமான கவிதை... எளிமையான தமிழில்...

கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

http://lksthoughts.blogspot.com/2011/03/22032011.html

//எனக்கு மட்டுமே புரிந்த
என் தவறு வெளியில்
தெரியாத சில சமயம்
இப்படித்தான் ஆகிறது//

exactly

மன சாட்சியுள்ள அனைவரும் உணர வேண்டிய விஷயம். thanks for sharing

pl visit http://suharaji.blogspot.com

கருத்துரைக்கு நன்றி ராஜி.