மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


     இன்றைய பதிவில் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை சமாளித்து, அவர்களுடனான நம் உறவை எப்படி சமன் செய்வது என்று பார்க்கலாம். இந்த வகையில் முதல் இடத்தை பிடிப்பது , நம் பிள்ளைகள். இரண்டாவது வருவது நம் குடும்பத்தாரில் யாராவது தற்காலிகமாக அல்லது நிரந்தர நோயாளியாவது - மாமனார், மாமியார் போன்ற வயதானவர்கள். வயதானவர்களிடம் இயல்பாகவே நாம் கனிவுடன் நடந்து கொள்வோம். நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது அவர்கள் பேச்சையும் செயலையும் மனதிற்குள் கொண்டு போகக்கூடாது. " இத்தனை நாள் இதையெல்லாம் மனதிற்குள் வைத்துக் கொண்டுதான் பழகினார்களா? " என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. அதைவிடுத்து விளக்கம் கேட்டால், உடல் நலம் சரியில்லாதவருடன் வம்பு வளர்ப்பதாக பழிச் சொல் வரும். மேலும் இது போன்ற பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் நம்முடன் இருக்கும் மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வார்கள். இது மல்லு கட்ட வேண்டிய விசயமல்ல.

     வளர்ந்து வரும் நம் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்தான் , நாம் விரைவாக சரி செய்ய வேண்டியது. உங்களுக்குப் பிடிக்காத அல்லது தேவையில்லாத பழக்கங்கள் ஆரம்பிப்பது தெரிந்தால் - முதலில் பொறுமையாக அதன் பின் விளைவுகளை விளக்குங்கள். அவர்களும் பதில் பேசுவார்கள் - தற்கால பார்வை நம்மிடம் இல்லையென்றும் மற்ற நண்பர்கள் வீட்டில் அப்படி இல்லையென்றும் வாதிப்பார்கள். நூறு சதவிகித கவனத்துடன் நாம் இருந்தால் , அவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியும். இல்லையென்றால், உலக வழக்கப்படி குரல் உயர்த்தி பேசுவோம். ஆரம்பத்தில் பயந்து வாய் மூடினாலும், நாளடைவில் வார்த்தையாட ஆரம்பிப்பார்கள் - இதனை அம்மாக்கள்தான் அதிகம் சந்திப்பார்கள். அப்பாவிடம் முகம் திருப்பப்படும். அவர்கள் வாயாட ஆரம்பித்தால், நாம் இத்தனை நேரம் இழுத்து வைத்திருந்த பொறுமை போய்விடும். வசை பாடல் வழிமுறையாக முந்தின வாரம், முந்தின மாதம் நடந்தது, நமக்குத் தெரிந்த இது போன்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவோம்.

       இது போல நம் பெற்றோர் நம்மிடம் நடந்து கொண்ட போது நாம் மனம் நொந்து போய் , நம்மை மாற்றிக் கொள்ள முயற்சித்தோம். இந்த காலத்தில் அப்படியல்ல - நாம்தான் நேர்மையின் திருவுருவாய் பிள்ளையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசி மட்டம் தட்டி மனதை வேதனைப் படுத்தி விட்டோமோ? என்று வருத்தப்படுவோம். ஆனால், இன்றைய இளையவர்கள் " என்னை மட்டம் தட்டி விட்டீர்கள் அல்லவா?" என்று கோபிப்பது போல நடித்து சம்பந்தப்பட்ட பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள். சில பிள்ளைகள் வாயே பேசாமல் சிரித்து மழுப்பி விடுவார்கள். " எனக்கு பசிக்குது, தலைவலிக்குது " என்று திசைதிருப்பி விடுவார்கள். இந்த வழி முறைகள் எதிலும் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பதில் பேசக்கூடாது, கோபப்படவும் கூடாது. ஏற்கனவே நான் சொன்ன முழு கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும் . அதற்கான பயிற்சிகளை நாம் பயில வேண்டும். மனதிற்குள் பதிய வேண்டியது , நம் பிள்ளைகளின் நல்லதிற்குதான் இதை செய்கிறோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை அவர்களை பின்பற்ற வேண்டும் என்று நாம் நினைக்கக்கூடாது. இப்படி இருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் பூரண மனக்கட்டுப்பாடு கிட்டும். சுயநலமில்லாத மனம், தெளிவான நோக்கம் , அதற்கேற்ப உடல் மொழி (நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன்) இவையே மனக் கட்டுபாட்டின் தாரக மந்திரங்கள்.
                                                                                         - இன்னும் கொஞ்சம் நாளைய பதிவில்
                       
                       விசையுறு பந்தினைப்போல் -உள்ளம்
                       வேண்டிய
படி செல்லும் உடல் கேட்டேன்.
                       நசையறு மனம் கேட்டேன்- நித்தம் ----
                       ------------ ----------- ----------
                      அசைவறு மதி கேட்டேன் ------

                                                                           - மகாகவி பாரதி

ாது வரினும்... யாது போயினும் -Part-6

4 comments:

ஆகா.. அருமையா போய்டிருக்கு..

உற்சாகமூட்டும் வரிகள். நன்றி திரு.கருன்

முழு கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும் . அதற்கான பயிற்சிகளை நாம் பயில வேண்டும். //
Interesting and useful post.

கருத்துரைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி