மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

         எனவே நான் சொல்ல வருவது என்னவென்றால் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பது நம் மனதை தளரவிடாமல் உறுதியாக வைத்திருப்பதற்காக சொல்லப்பட்டது. நல்லது கெட்டது எதற்கும் உணர்ச்சியே காட்டாத பாவனையில் இருந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதனையே கடைபிடித்தால்... நன்றாக இருக்காது - ஒரு நாடக பாவனைதான் வரும். ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள தத்தம் கருத்துக்களை சொல்லித்தான் ஆக வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ( தாத்தா, பாட்டி) இருந்தார்கள் , அவர்களின் வழியாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும். இப்போது கூட்டுக் குடும்ப முறை குறைந்து விட்டதால், இவற்றை நாம்தான் சந்திக்க வேண்டும். அதற்குத்தேவையானவை, 
1. கண்டிப்பாக இதனை சரி செய்ய வேண்டும் என்கிற மன உறுதி.

2. சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற யூகமும் வேண்டும் இரு வித கருத்தையும் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பதட்டப்படாமல் இருப்போம். சரியான பதிலை பொறுமையாக தர முடியும்.


3. பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கவும்.


4. கடைசி வார்த்தை நம் வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் நம்முடைய கருத்தை தெளிவாகக்கூறிவிட வேண்டும். பிறகு எப்போதும் போல சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய பதில்களையும் ஒரு முறை பொறுமையாக அலசிப்பார்க்கவும். ஒரு வேளை நியாயமாக தோன்றினால் மாற வேண்டியது நாம்தான். அதற்கான காரணங்களையும் தெளிவாக சொல்லுங்கள். இல்லையென்றால் பேசி வெற்றி பெற்றுவிடலாம் என்று மற்றவர்களுக்கு தோன்றும்.


5. மிக முக்கியமான விசயம் என்றால் நேரம் கழித்து மறுபடியும் முயற்சிக்கலாம்.


6. " எதிரியின் ஆயுதத்தத்தை நாம்தான் தீர்மானிக்கின்றோம்" என்ற வாக்கியத்தை நினைவில் கொள்ளவும். ஒரு நீண்டவிவாதத்தின் பின் சமாதானத்திற்கு வருவது இயல்புதான். தேவையில்லாத மனக்கசப்புக்களை தவிர்க்கலாம்.


     இதற்கெல்லாம் பயந்து ஒதுங்கினால் , பீலி பெய் சாக்காடும்.... என்ற குறளுக்கு ஏற்ப , ஒரு நாள் எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல் குமுறல்கள் வெளிவரும். முதல் அத்தியாயத்தில் சொன்னது போல வேறு வழிகளில் மனதை திருப்பிக் கொண்டால் நாம் நன்றாக இருப்போம். ஆம், நாம் மட்டும்தான் நன்றாக இருப்போம். குடும்பத்தில் முக்கிய பொறுப்பில் நாம் இருந்தால் குடும்பத்தையும் பாதிக்கும். நாம் பொறுப்பில்லாதவர் ஆகிவிடுவோம். அதை விட நல்லதில் மகிழ்ந்து, அல்லாததில் வருந்தி - காரணம் கண்டுபிடித்து, கோபப்பட்டு, சரி செய்து சிரிக்கலாம். நல்ல குடும்பத்தின் தலைவராவது அத்துனை எளிதன்று. சின்ன சின்ன தவறுகளை சரி செய்வது , குடும்பத்தினருடன் உண்மையான கவனம் வைத்திருப்பது , கடந்துபோன வருத்தமான விசயங்களை மறப்பது போன்றவை நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். 
               
                இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
                எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
               தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்.
               தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.
                                                                                                  - மகாகவி


                             இது வரை தொடர்ந்து வந்ததற்கு நன்றி.

   யாது வரினும்... யாது போயினும்.- Part 5

7 comments:

தொடர் பதிவு அருமையா இருக்குங்க...

திரட்டில இணையுங்கள்..

பதிவு அருமையா


இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

கருத்துரைக்கு நன்றி திரு.கருன். திரட்டியில் இணைத்தாச்சு.

கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகக்குமார்.

6. " எதிரியின் ஆயுதத்தத்தை நாம்தான் தீர்மானிக்கின்றோம்"
பதிவு அருமை

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.