மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     ஒரு சூழலுக்குட்படும்போது நமக்கு தோன்றும் உணர்வுகள் உடனடியாக வெளிப்படும், ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று ஆராய முடியாது. ஆரம்ப நிலையில் தோன்றவும் செய்யாது. பொதுவாக, புதிதாக ஒரு சூழலுக்குள் தள்ளப்படும்போது நாம் எப்படி செயல்படுவோம் என்று கணிக்க முடியாது. எந்த வித உத்தேசமும் இல்லாமல் சந்திக்கும் போது நாம் படித்த நீதிகளும், மற்றவர்களின் அனுபவங்களும்தான் நமக்கு வழிகாட்டி. ஆனால் நிறைய சமயங்களில் நாம் அவற்றை கையாளுவதில்லை. ஏனென்றால் அவற்றை உணரும்வரை நாம் அவற்றை நம்புவதில்லை.

     உதாரணமாக, சினம் காத்தல் பற்றி திருவள்ளுவர் வரிகளை படித்திருப்போம். செல்லுமிடத்து காப்
துதான் சிறப்பு, அல்லிடத்து காக்காவிட்டாலும் ஒன்றுமில்லை என்றிருப்பார். ஆனால் நாம் செல்லுமிடமாகிய நம்மை சார்ந்திருப்போர், சிறியவர்களிடம்தான் கோபத்தை காட்டுவோம். அதன் விளைவு சில வேளைகளில் துயரமாக முடியலாம். உண்மையென்னவெனில், அல்லிடத்து - நம்மை பாதிக்கக்கூடிய கட்டுப்பாட்டு விசைகளை தன் வசம் வைத்திருப்போர்- சினம் கொண்டால் நாம்தான் பாதிக்கப்படுவோம், செல்லிடத்து சினம் மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடும். வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்றாலும் ஒவ்வொருவரிடமும் மன ஆழத்தில் நியாயபுத்தி இருக்கும். அது பிற்பாடு நம்மை கேள்வி கேட்கும். ஒரு முறை அதன் கேள்வியின் பிடியில் சிக்கி வெளிவந்த பின் செல்லிடத்து காப்பதன் அவசியம் புரியும். உண்மையென்னவெனில், உடனடியாக தராசு தட்டை தூக்கிக் கொண்டு வந்து நீதி சொல்லும் தயாரான நிலையில் மனசாட்சியை நாம் வைத்திருப்பதில்லை. சிறிய தீக்கங்குகளை உள்ளே வைத்து புகையவிடும் வித்தை மட்டும் அதற்கு நன்றாக தெரியும். அதன் விளைவாகவே , சமாதானத்திற்கு இறங்கி வருவது, " உன்னை புரிந்து கொள்ளவில்லை" என்று மன்னிப்பு கேட்பது எல்லாம் நடக்கிறது.( Every man wants to pretend as a perfect man - infront of his super -ego. ) 

    நாம் மற்றவருடைய உணர்வுகளை சரிவர கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாடத்தின் முதல்படி உணர்வுகளை புரிந்து கொள்ளுவது என்பது.
ஒருவருடைய முகபாவனை, செய்கை, வார்த்தைகள் ஆகியவற்றை கொண்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது. அதற்கான காரணங்களை புரிந்து கொள்வது. அதன் நோக்கத்தை கண்டு கொண்டவுடன் தான் சந்தர்ப்பத்தை சரிவர கையாள முடியும். பொறுமையில்லாத பார்வை , கை விரல்களை மூடிக் கொண்டு நிற்பது, வெற்றுப்பார்வை , முகம் சிவக்க ஆரம்பித்தல், அல்லது கறுத்து போகுதல் போன்றவை நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிவிடும். கொஞ்சம் பின்வாங்கலாம், இதமாக பேசலாம் அல்லது வேறு விசயத்தை பேசி இயல்பு நிலை வந்த உடன் திரும்பவும் ஆரம்பிக்கலாம். 

      பெரியவர்கள் எனில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மென்மையாக கையாள வேண்டும். அப்படியென்றால் என்ன? ஒரு தோல் உறிக்காத வாழைப்பழத்தி்ல் மெல்லிய ஊசியை மிக மெதுவாக செலுத்தி 0 விலிருந்து 360 டிகிரிவரை குறுக்காக சுற்றிவிடுங்கள்( ஊசி முனை மறுபக்க தோலின் வழியே வெளிவரக்கூடாது. ஊசியை வெளியே எடுத்து விட்டால் முழு பழமாகவே தெரியும். பிறகு உறித்து பார்க்கும்போது இரண்டு துண்டாக வாழைப்பழம் கிட்டும். அப்படித்தான் ஊசி குத்திய வடு தெரியாமல் பழத்தை ( பழத்திற்கே தெரியாது, பார்ப்பவர்க்கும் தெரியாது.) துண்டாக்குவது போல செயல்பட வேண்டும். அதற்கு எத்தனை கவனமாக இருக்க வேண்டும், நிறைய சந்தர்ப்பங்களை அலசி பார்க்கவேண்டும் அது மற்றவருடையதாக இருந்தாலும்.

    புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாள என்ன வேண்டும்?. தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல்.
நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும். உங்களுடைய EIயை இணையத்தில் கிட்டும் on line testஐ பயன்படுத்தி கண்டு கொள்ளுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை கொண்டு புத்திசாலித்தனத்தை அளவிடுகிறார்கள். இந்த பதிவு ஒரு ஆரம்பம் மட்டுமே உங்களுடைய முயற்சிகள் பயிற்சிகள் மட்டுமே இதனை முழுமை படுத்தும்.  சீரான வாழ்க்கை அமையவும் வெற்றிகரமாக முன்னேறவும் emotional intelligence மிகவும் அவசியமாகிறது. புரிந்து கொண்டு வெற்றியை கைபற்றுங்கள். 
   -  வாழ்த்துக்களுடன் சாகம்பரி.

 

32 comments:

" புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாள என்ன வேண்டும்?. தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல். நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும்."

வார்த்தைப் பிரயோகங்கள் நன்றாக இருக்கின்றன சாகம்பரி! தராசு போல சுய அலசல் செய்து கொள்வது தன்னை முழுமையாக அறிந்து கொள்ள‌ வழி வகுக்கும். மனம் நிறைய காருண்யமிருந்தால் அனைத்து நல் உண‌ர்வுகளும் கைவசப்படும்!!

மிகச் சரியாக துவங்கி
அழகாகத் தொடர்ந்து
நிறைவாக அருமையாக
பதிவை முடித்துள்ளீர்கள்
நல்ல பதிவு
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
(நேற்று முழுவதும் தங்கள் பின்னூட்டப்பெட்டி
ஓபன் ஆகாமல் இருந்தது..தகவலுக்காக)

மீண்டும் ஒரு நல்ல சுய முன்னேற்றத்துக்கான தொடர். நன்றி

//முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும்.//

மேலே கூறிய இரண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற மிக அவசியம்.

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்

இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதா? நன்று

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று கேள்விப்பட்டுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலம் தான் அதன் முழுவிபரங்கள் அறிந்து கொண்டேன்.

பதிவு மிகவும் நனறாக உள்ளது.
நேற்று என்னைப்போலவே உங்கள் Comments Box உம் வேலைசெய்யாததால் பின்னூட்டம் இட நினைத்தும் முடியாமல் போனது.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது.

பாராட்டுக்கள்.

//மனம் நிறைய காருண்யமிருந்தால் அனைத்து நல் உண‌ர்வுகளும் கைவசப்படும்!!// சத்தியமான வார்த்தை. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த காளத்தில் கவனிக்க வேண்டிய விசயமும்கூட. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேட

இது ஒரு பெரிய தலைப்பு சார். சரியாக முடிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. தங்கள் கருத்துரை நம்பிக்கை தந்துவிட்டது. VGK சார் மாதிரி எனக்கும் பிரச்சினையாகிவிட்டது. pop-up box மாற்றவும் சரியாகிவிட்டது. நன்றி சார்.

நன்றி திரு.எல்.கே.

தொடர்ந்து வருகிறீர்கள் நன்றி - அவர்கள் உண்மைகள்- வலைப்பூவின் பெயரை சொல்லி அடையாளப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. ஒரு புனை பெயராவது வைத்துக் கொள்ளமில்லையா.

இது எனக்கு பள்ளியில் கற்றுத்தந்து செய்முறையுடன் விளக்கம் தந்தது தமிழம்மா. நலல்ல விளக்கம்தானே. நன்றி திரு. சண்முகவேல்.

நான் திருச்சி ஹோலிக்ராஸ் பழைய மாணவி. அப்போது இதையெல்லாம் மாஜிக் போல செய்துகாட்டி விளக்கினார்கள். கருத்துரைக்கு நன்றி சார்.

ஊசி குத்திய வடு தெரியாமல் பழத்தை ( பழத்திற்கே தெரியாது, பார்ப்பவர்க்கும் தெரியாது.) துண்டாக்குவது போல செயல்பட வேண்டும். //
முயற்சிகள் பயிற்சிகள் மட்டுமே இதனை முழுமை படுத்தும்.
Interesting and use-full post.Thank you for sharing.

Thank you Rajarajeswari

>>முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும்

சைக்கலாஜிக்கல் திங்க்கிங்க்

உணர்வுகளை ஆயுதங்களுக்கு ஒப்பிட்டு அவற்றின் எல்லைகளை வரையறுக்கும் விதம் அலாதி. ஒவ்வொருவரின் மனதிலும் கட்டாயம் ஏற்றிவைக்கப்படவேண்டிய அருமையான கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறீர்கள். உங்கள் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் இதுபோன்ற அருமையான பதிவுகள்.

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சி.பி சார்.

புதிய மருத்துவ முறைகளால் உடல் நலம் பேணப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் மன நலம் குறைதிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதை கவனப்படுத்துகிறேன். நன்றி கீதா.

useful to all.thanks.

http://zenguna.blogspot.com

Thank you Mr.guna.

நன்றாக உள்ளது.

வருகைக்கு நன்றி கீதா மேடம்.

//////தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல். ////

மிகவும் தன்னம்பிக்கையுட்டும் ஆக்கமுங்க.... அழகான மொழியில் உரைத்துள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி....

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

வணக்கம். கருத்துரைக்கு நன்றி திரு.ம.தி.சுதா.

Madurai Tamil Guy - னு கூப்பிடுங்கள் அல்லது நீங்களாகவே எனக்கு ஒரு நல்ல பெயர் சூட்டுங்கள்

Thank you, Mr.Tamil guy.

மற்றவர்களுடைய உணர்வுகளை கையாளுதல் பற்றி சொன்னது அருமை. எத்தனை சதவிதம் பேர், அடுத்தவர் உணர்வு குறித்து யோசிக்கிறார்கள்.

வாங்க வணக்கம். இனி எல்லோரும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் மற்றவர்களுடன் இயைந்து வாழும் வாழ்க்கைதான் முழு வாழ்க்கை என்று புரிய ஆரம்பித்துவிட்டது. Emotioal Intelligence பற்றி சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார்கள். நன்ரி திரு.உதயம்.

உணர்வுகளை கையாளுதல் பற்றி உணர்ப்பூர்வமாய் மிக தெளிவாய் சொல்லியிருக்கீங்க அனைவருக்கும் புரியும்படியான விளக்கங்கள். அருமை. பாராட்டுக்கள்...

[நீரோடையில்: சிக்கித்தவிக்கும் சனநாயகம்..]

வணக்கம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மலிக்கா.

நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும்.//

இந்தவரிகள் என்னக்காக எழுத பட்டனவோ என்று தோன்றுகிறது
நிறைய கேள்விகளுடன் குழப்பங்களும் எழுந்துகொண்டே இருக்கிறது
தொடருங்க மிக சந்தோசம் வாசித்ததில்

கண்டிப்பாக சிவா. தொடர்ந்து வாருங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.