மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஏதோ ஒன்று உறுமியது
     சிவந்த கண் கண்டு .....
        சற்றே கவனம் கொண்டேன்!

சினம் கொண்ட எதுவோ சீறிட
     கூரிய நகம் கண்டு
         பாதுகாப்பாக மரம் ஏறினேன்!

மற்றொன்றோ தலை தூக்கி
       விஷப் பற்கள் நீட்டியது
           பத்தடி தள்ளி ஓடினேன் !

சில மிதிக்க வரும்போது
       காலடியில் சிக்காமல் 
           பாறையின் பின் ஒளிந்தேன்!

எதுமே இல்லாத நேரத்தில்
   -    ஆனந்தமாய் தேன் குடித்து
   -    வேர் உண்டு, உறங்கி களித்தேன்
   -    பயம் இல்லாதபோது
   -    சிறிது பாசம் பரிமாறினேன்

வானம், பூமி மாறாத
    கால ஓட்டத்தில் சிக்கி
ஒரு கணப் பொழுதும்
     நிம்மதி உறக்கத்தில் 
இமை மூடமுடியாத
     கட்டிடங்களின் காட்டில்
மரங்களை இழந்து
     தனித்து நிற்கிறேன்.

பார்வையில் பேச்சில்
      செயலில் தெரியாத
மனித தோல் மிருகங்கள்
      என் கவனம் சிதற்றாமல்
ஒளிய இடம் தேடவிடாமல்
     ஓடி செல்ல அவகாசம் இன்றி
நொடிக்கும் நேரத்தில்
     என் உலகத்தை கலைத்திட 
காட்டு வாழ்க்கையை
      மீண்டும் வேண்டினேன்.

23 comments:

நன்றி மனோ சார் . google accountல் குழப்பமாக இருக்கிறதே.

அருமையான கருத்து...

முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சியாடும் கயமைகளுக்கு மத்தியில் சுயம் தொலைத்து வாழ்வதைவிட, காட்டுவாழ்க்கை மேல்தான்....

அசத்தலான கவிதை...
காட்டு வாழ்க்கையில் நாம எந்த விலங்குக்கு பயப்படவேண்டும் என்று தெரிந்து விடும்...
ஆனால் நாட்டு வாழ்க்கையில்..

இந்த கவிதை தந்ததற்கு
வாழ்த்துக்கள்..

நன்றி திரு.சிசு. கவிதையின் திறனாய்வு ரொம்ப சரி. விளக்கத்திற்கும் நன்றி.

//காட்டு வாழ்க்கையில் நாம எந்த விலங்குக்கு பயப்படவேண்டும் என்று தெரிந்து விடும்...
ஆனால் நாட்டு வாழ்க்கையில்..// வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சௌந்தர்

//மரங்களை இழந்து
தனித்து நிற்கிறேன்.//


அனைவருக்கும் இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.நல்ல கவிதை.

உண்மைதான் நன்றி திரு.சண்முகவேல்

//பார்வையில் பேச்சில்
செயலில் தெரியாத
மனித தோல் மிருகங்கள்//

//காட்டு வாழ்க்கையை
மீண்டும் வேண்டினேன்.//

மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

/மனித தோல் மிருகங்கள்/
இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், இவர்களை மிருகங்கள் என்றால் மிருகங்களுக்குதான் கேவலம்

நீங்கள் அழகாக சிந்தித்து எழுதுகிறீரகள். அழகாக சிந்திப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லித்தாருங்களேன். நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி உங்களை போல உங்களுக்கு போட்டியாக நல்ல பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன்

அருமை அருமை
காட்டு வாழ்க்கைக்கும் நாட்டுவாழ்க்கைக்கும் ஆன
ஒப்பீடு மிக அருமை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

அசத்தல் சிந்தனை....

காட்டு வாழ்க்கையே ஆனந்தம்! உண்மைதான். கீழ்க்குண மக்களோடு ஒப்பிடுகையில் காட்டு மிருகங்கள் ஆபத்தற்றவையே... அழகான கவியமைப்பு. மிகுந்த பாராட்டுகள்.

நொடிக்கும் நேரத்தில்
என் உலகத்தை கலைத்திட
காட்டு வாழ்க்கையை
மீண்டும் வேண்டினேன்.//

நல்ல படைப்பு . பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்

//இமை மூடமுடியாத
கட்டிடங்களின் காட்டில்
மரங்களை இழந்து
தனித்து நிற்கிறேன்.//

அருமையான வார்த்தைத் தேர்வு. அழகான ஒப்பீடு

காட்டு வாழ்கையை கொடு நாட்டு வாழ்க்கையின் அவலங்களை சொல்லி உள்ளீர்கள்

//Avargal Unmaigal said...

/மனித தோல் மிருகங்கள்/
இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், இவர்களை மிருகங்கள் என்றால் மிருகங்களுக்குதான் கேவலம்//
சரிதான்
//உங்களுக்கு போட்டியாக...//

என்னுடைய பெட்டிக்கடைக்கு எதிரே டிபார்ட்மெண்ட் ஸ்டோர்!

நன்றி திரு.ரமணி சார்.

நன்றி திரு .மனோ

வாங்க கீதா. பாராட்டிற்கு நன்றி.

பாராட்டிற்கு நன்றி. இராஜராஜேஸ்வரி

அருமையான வார்த்தைத் தேர்வு. அழகான ஒப்பீடு//
நன்றி கடம்பவன குயில்.

அப்படித்தான் எனக்குத் தோன்றியது.