மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


ஆரம்பம் ஏதுமறியா வெள்ளை!
தாயிடம் முகம் புதைந்து தாலாட்டு, 
விரல்களை நீட்டி உலக ஸ்பரிசம்!
வெளிக்காற்று பட்ட நொடியில்...
சிவப்பு... நீலம்... பச்சை... மஞ்சள்...
குணங்களின்  வண்ண சாரல் மழை!
தூறல் பட்டு அடையாளம் ஆனேன்...

மகளாய் மனைவியாய் அன்னையாய்
ஒவ்வொன்றும் ஓவியமாக மாறியது.
ஆனாலும் ஒன்று, இந்த நிறமாற்றம்
வழுக்கிக் சென்ற நாட்களின் லயிப்பில்
என்னுள்  விமர்சிக்கப்பட்டதில்லை
எப்போதாவது  அடிமனம் தேடும்
எனக்கென்று நிறம் இல்லையா?

எனை நனைத்து நிறம் கரைத்து
இயல்பினை காட்டும் மழைக்காக
நீண்ட நெடிய ரகசிய காத்திருப்பு! 
ஒரு கடைசி நேரத்து தூறலில்
என்னிடமிருந்து நான் விலகி தனித்து
பிரித்தறியா காற்றில் கலந்த நொடி
தெள்ளியமாய் புரிந்து போனது...
நிறமில்லாத இயற்கைதான் 'நான்' 

என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றிகள்! மூன்றாம் கோணம் இணைய இதழிற்கும், என்னுடைய கவிதைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களும் மிக்க நன்றி! பரிசு பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.




11 comments:

கவிதை பல நிறங்களுடன் நன்றாக எழுதப்பட்டுள்ளது.
நிறமில்லாத இயற்கைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமே! அன்பான வாழ்த்துக்கள். vgk

பரிசுக்கு தகுதியான கவிதை. வாழ்த்துகள்.

வாழ்த்துக்கள்...

மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

இன்றுதான் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம்..
வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகான நயத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்..சாதனை மேலும் படைக்கவும்..
இன்று ஒரு புது ரசிகன் ..உங்கள் வலைப்பூவில்...அடியேன்..நான் தானுங்க...

வாழ்த்துக்கள் அம்மா, முதல் பரிசு பெற்றமைக்கு... விருந்து எப்பொழுது அம்மா. . .

வரிகளும்
வாழ்கையை அழகாய்
தூரிகை போட்டு
கவிதைக்கு
கைகொடுக்கிறது

நானும் இதற்கு ஒரு கவிதை எழுத முயன்றேன்
மிகச் சரியாக தங்களைப்போல ஒரு நல்ல கருவாக
அமையாத காரணத்தால் கவி உருவாகாமலே
போய்விட்டது.தங்கள் படைப்பு அருமை
வாழ்த்துக்கள்

இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து கொண்ட VGK Sir, தமிழ் உதயம், கவிதை வீதி சௌந்தர், திரு. சண்முகவேல், பிரணவன், சிவா , ரமணி சார் அனைவருக்கும் நன்ரி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் வருகைக்கு, தொடர்வதற்கும் நன்றி திரு.குணசேகரன்.

ஒரு நிறமில்லா இயற்கைக்கு மற்றொரு நிறமற்ற இயற்கையின் வாழ்த்துக்கள்
ஆனால் தோழமை என்னும் வண்ணம் கலந்து