மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பிரச்சினை இருப்பதை புரிந்து கொண்டாயிற்று. இனி, என்ன செய்வது என்பதை இரண்டு விதமாக அணுகலாம். பிரச்சினை நமக்கு என்றால் என்ன செய்வது?. நம்முடைய நெருங்கிய உறவினருக்கு என்றால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

நமக்குத்தான் பிரச்சினை:
 1.  தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

2.  யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது.  புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.

3.  உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.

4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை  குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.

     -- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.

   - சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து  கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.

5.  புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
 
6. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவம் உணர்ந்து நமக்காக சிந்திக்கும் ஒருவரை இத்தனை நீண்ட வாழ்க்கையில் தேடுவது கடினம் அல்லவே. அவர்களை மதிப்பதும் பெருமைபடுத்துவதும் நமக்கு நல்லது. அப்படி ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், கவனித்துப் பாருங்கள் அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். 
 
7. இது போன்ற மனக்கொந்தளிப்புகள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும். பெண்களுக்கு மிகக்குறைவுதான். ஏன் என்றால், கட்டுப்படாத சூழ் நிலையினை உணர்ந்து பெண்கள் கட்டுப்பாட்டு விசையினை ஆண்களிடம் விட்டுவிடுவார்கள். "ஏன், ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறாய்?" என்றும், "நீங்களே சொல்லுங்களேன் என்னவென்றாலும் சரிதான்" என்ற  கழண்டு கொள்ளும் பதில் உரையாடலும் நடக்கும் நிலையது. ஆண்களுக்கு இயல்பான ஈகோ இருப்பதால் புலிவாலை பிடித்து விடுவார்கள் (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) ஆக நம்பிக்கைக்குரிய ஒருவர் நம்முடன் இருப்பது நல்லதுதானே, இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
                        
                               
                                               - அடுத்து,  தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்


22 comments:

சிறந்த தொடர்... மனக் கதவு திறக்க...

பிரச்சினை என்றால் கவுன்சலிங் போகலாமே!

கருத்துரைக்கு நன்றி பிரகாஷ்.

போக முடியாததற்கு இரண்டு காரணங்கள் 1. குடும்பத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர் இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கோ-ஆபரேட் செய்ய மாட்டார்கள். 2. இது நீடித்த பிரச்சினையும் இல்லை. ஒரு சிறிய தடுமாற்றம் மட்டுமே. அந்த நிலையில் நாம் என்ன செய்வது என்பதை புரிந்து கொண்டால் சமாளித்து விடலாம். இது போல் அடிக்கடி நிகழும். (உடல் சோர்வு போல் மனச்சோர்வு).. நன்றி திரு.சண்முகவேல்.

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

வணக்கம் சார். தங்கள் கருத்துரை என்னை ஊக்குவிக்கிறது. நன்றி

பிரச்சனைகளின் மன அழுத்தத்திற்கான
தீர்வுகள்...
அருமை.
தொடருங்கள் பதிவை.

http://www.ilavenirkaalam.blogspot.com/

நாம் எடுக்கின்ற முடிவு குறித்து நமக்கு சந்தேகமோ, பயமோ திருப்தியின்மையோ ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் பிறர் உதவியை நாடுவது நல்லது.

oru பகுதி படிக்க முடியவில்லை
மீண்டும் வாசிக்க வேண்டும்

பிறகு இந்த பகுதி மிக சிறப்பாக இருந்தது
மக்கான எனக்கு எளிதில் விளங்கும் படியும் இருந்தது
நன்றி டீச்சர்

- அடுத்து, தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்//
டீச்சர் கொஞ்சம் இன்னும் இரண்டு பகுதி தொடரலாமே
வேண்டுகோள் மட்டுமே உங்கள் விருப்பம்

இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
//
நெருங்கிய நட்பிடம் கேட்கலாமா?

// புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும். //

கவலைகளை மறக்க இந்த முறையினை கையாளலாம்...அருமையான வழிமுறையை சொல்லியமைக்கு நன்றிகள்

ஒவ்வொரு குடும்பத்தினுள்ளும் மறைமுகமாகவோ நேரடியாகவோ தென்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி அருமையான ஆலோசனைகளை அள்ளி வழங்கிவருகிறீர்கள். பாராட்டுகள் சாகம்பரி. இந்தப் பகுதியில் சொன்ன உபாயங்கள் அனைத்தும் மனம் தேற்றுவதில் மகத்தானவை. தொடரட்டும் உங்கள் ஆலோசனைகளும், அற்புதக் கருத்தாக்கங்களும்.

// (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) //

கட்டுரை மிகச்சிறப்பாக, எனக்கே எனக்காக எழுதப்பட்டுள்ளது போல உணர்கிறேன். என்னைக்கவர்ந்த ஒரு சில வரிகள்:

//அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை.//

// புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும். //

//எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும்.//

//அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். //

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். தொடருங்கள்.

அருமையான பதிவு.

வணக்கம் மகேந்திரன் சார். கருத்துரைக்கு நன்றி.

அந்த ஒருவர் நம் நலம் விரும்பியாக இருக்க வேண்டும். நன்றி திரு.தமிழ் உதயம்

ரொம்ப நன்றி சிவா. இது போன்ற பதிவுகளை இளைய சமுதாயத்தினரும் படிப்பது மகிழ்ச்சியை தருகிறது.

ஆமாம் ராஜேஸ், இந்த முறைகளை நானே கையாண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பிரச்சினை முடியும்போது ஏதாவது ஒன்றை புதிதாக கற்று இருப்பேன். (50 சதவிகிதமாவது)

//இந்தப் பகுதியில் சொன்ன உபாயங்கள் அனைத்தும் மனம் தேற்றுவதில் மகத்தானவை. தொடரட்டும் உங்கள் ஆலோசனைகளும், அற்புதக் கருத்தாக்கங்களும். // ஊக்குவிப்பதற்கு நன்றி கீதா.

மிகவும் பிஸியாக இருக்கும்போதும் வந்து வாழ்த்துகிறீர்கள் சார். மிக்க நன்றி.

அருமையான பதிவு. //கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.