மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


என்னுடனேயே பிறந்தாய்..
       கைப் பிடித்து  நடந்து ஓடி
ஒன்றாய் கூடி  கதை பேசி
       ஒரு குடம் தண்ணி ஊற்றி
பூப்பூவாக  பூத்து குலுங்கி
       அன்னை தந்தை கொஞ்சி
குவித்த அத்தனை பாசமும்
     கிள்ளி வைத்து பங்கு பிரித்து
கள்ளமின்றி ஆடித் திரிந்தோம்!
இன்று....
ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
    எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!
    சிறு சிறு பழியினை சுமத்தி விட்டு
உன்னை தொலைத்து ஓடுகிறாய்!
     வெறுப்பை வலிந்து கேட்கிறாய்!



ஏனென்று எனக்குத் தெரியும்!
    உன் 'வீட்டு' தோல்விக் கதை
அத்தனையும் புரியும்... ...
     உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
    உனக்குத்தான் தெரியாது ..!
ஒன்று மட்டும் சொல்லுவேன்....
     என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
     வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
   

     அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த  கதை கேட்பேன்....
     அது வரை என் கேள்வியின்
எல்லைக்குள் வராமல்
      அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.

22 comments:

அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.// அருமையான வார்த்தை பிரயோகம்.. பகிர்வுக்கு நன்றி..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.கருன்

இயல்பான வார்த்தை விளையாடல்கள்.
இனிய கவிதை.

http://www.ilavenirkaalam.blogspot.com/

//என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
வெற்றி நாள் ஒன்று வரும்//

நம்பிக்கை வரிகள். நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

கவிதை - காத்திருப்பை சொன்னது. ஏமாற்றத்தை சொன்னது. கடைசியாய் கோபத்தையும் உரைத்தது. எல்லாம் கலந்தது தான் காதலோ.

உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
உனக்குத்தான் தெரியாது ..!>>>

உண்மைதான்... பட்டால்தான் தெரியும்.

உடன்பிறந்த உறவோடு ஆடும் கண்ணாமூச்சி வாழ்க்கையாய்ப் படுகிறது எனக்கு. ஆசைப்படி அத்தனையும் நிறைவேறட்டும், அறைகளுட்பட! அப்போதுதானே அன்பின் வலிமையை அவரும் உணரக்கூடும். பகிரக் கிடைத்த பாசத்தையும், பற்றக் கிடைத்த தோள்களையும் தவறவிட்ட தன் தவறும் புரியும். உறவுகளின் உன்னதம் சொல்லும் கவிதையை மனதாரப் பாராட்டுகிறேன், சாகம்பரி.

//எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!//

ஆழமான பல இடங்களில் பல சூழ்நிலைகளில் பொருந்தகூடிய வார்த்தை....வெற்றி நாள் ஒன்று வரும் அன்று எனைப்பார்த்து சிரிப்பாய்... உண்மை தான் கண்டிப்பாக வரும்... அசத்தலான எதையோ எதிர்பார்த்திருக்கும் மனம் அற்புதம் சகோ... வாழ்த்துக்கள்

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

அணியசமான வார்த்தை பிரவேகம்
கோவம்,
பாசம்,
மனதில் உள்ள வலி அத்தனையும்
கவிதையாய்
இருமுறை படித்த பிறகு மனசு கனத்தது.
வாழ்க வளமுடன்

ஏன் இருமுறை படித்தேன் என்றால்
முதன் முறை
சற்று புரியவில்லை
ரெண்டாவது பொறுமையா படிக்கும்போது
ஏதோ ஒரு வலி

//ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
எதையோ அடிமனதில் மறைத்து//

பெரும்பாலான மனிதர்களுக்கு பொருந்துமே!

நன்றி மகேந்திரன் சார். தொடர்வதற்கும் நன்றி.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி VGK சார்.

காதல்.... அப்படியும் கொள்ளலாம். இது சகோதரிகளுக்கிடையேயான பாச விளையாட்டு. மனம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரே தராசுதான். நன்றி தமிழ் உதயம் சார்.

ஆமாம் பிரகாஷ். நன்றி

நன்றி கீதா. திருமணமான பின் வீட்டுபெண்ணிலிருந்து விலகி நிற்கும் சகோதரியின் இழப்பு மிக பெரியதுதான்.

நன்றி ராஜேஸ். கவிதையை உணர்ந்ததற்கு நன்றி.

சிவா, வாழ்க்கையில் இது போன்ற பகுதிகளை அனுபவிக்காமல் வலியை உணர்வது சிரமம்தான். நன்றி சிவா.

கண்டிப்பாக , நம்மை விட்டு விலக யத்தனிப்பவர்களின் நடவடிக்கை இதுவாகவே இருக்கும். நன்றி திரு.சண்முகவேல்.

//உன் தலை நிமிர்ந்து நிற்கும்
வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த கதை கேட்பேன்....//

வரிகள் கொண்டாடும் உரிமையே, கவிதைக்கான காரணத்தை தெளிவாக உணர்த்துகிறது.
உங்கள் இருவருடைய இலக்கும் எட்டும். வாழ்த்துக்கள்.

கருத்துரைக்கு நன்றி திரு.சத்ரியன். மகிழம்பூச்சரத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கும் நன்றி.