மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் ஒரு தவறிழைத்துவிட்டு அதன் பின் விளைவை உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்லவொன்னாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது நம் நெஞ்சம் படும் வேதனை சொல்ல முடியாது. அதிலும் தன் தவறான செயல் எண்ணித் தவித்து அதனால் மேலும் ஏதாவது துன்பம் விளையுமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டால் 'ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல அமைதியிழந்து அலைகழித்துவிடும்.  இதனைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் என்று சொல்கிறார்களோ?

வாழ்க்கையில் முதல் முறையாக தவறிழைக்கும்போது ஒருவித எதிர்ப்பு நம் உள்ளுக்குள்ளிருந்து வரும். அதை அலட்சித்து சில செயல்களை செய்துவிட்டு.  பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் கதையில் லேடி மெக்பெத் தன்னுடைய கைகளில் இரத்தக்கறை இருப்பதுபோன்றே ஒரு வித மாயையில் சிக்கி அடிக்கடி கையை கழுவிக் கொண்டே இருப்பாள் - ஏனெனில் ஏற்கனவே அவள் பல கொலைகளை செய்திருப்பாள். நம் பண்டைய இலக்கியங்களில் இது போன்ற செய்திகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றத்தை உணர்ந்த மறு நிமிடமே உயிர்த்தியாகம்தான் - மதுரையின் பாண்டிய நெடுஞ்செழியன் செய்ததுபோல்- செய்துவிடுவார்கள்.

தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான். மேலே நான் குறிப்பிட்ட சூழலில் இவை இரண்டையும் நாம் இழந்துவிடுவோம். விளைவு, மனிதன் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து விலங்கின் போர்வையை போர்த்துக் கொள்ள வேண்டி வரும்.

என்னைப் பொறுத்தவரை குற்றமுள்ள நெஞ்சம் பேசுவதும் பேசிக் கொல்வதும் மென்மையான இதயங்களில் மட்டுமே. ஒரு முறை அதன் பிடியில் சிக்கியவர்கள் வெளி வரத்தெரியாமல் தன்னுடைய இனிமையான சூழலை விட்டு விலகுவதும்,  அதனால் மேலும் அதே தவறினை செய்து புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன்னை தொலைத்தவர்களும் உண்டு. என்றைக்காவது தனிமை கிட்டும்போது தன்னை பற்றிய நினைவு வரும்போது கண்ணில் வரும் நீர் துளிகள் மன்னிக்க முடியாத வார்த்தைகளை தெரிவிக்கும். எனவே இது போன்ற மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் முன் மீளும் முனைப்பு முதல் திருப்பத்திலேயே வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா? 

                                       - அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.

18 comments:

//நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் ஒரு தவறிழைத்துவிட்டு அதன் பின் விளைவை உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்லவொன்னாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது நம் நெஞ்சம் படும் வேதனை //

குற்ற உணர்வு.நான் எழுத நினைத்த விஷயம்,முக்கியமானது தொடருங்கள்.

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு சகோதரி.....

///தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான்.///

உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை
ஒவ்வொரு முறை பிரிவின் போதும் யாம்
அனுபவிக்கிற சம்பவமே இது.....
தொடருங்கள் சகோதரி.....

மிக அருமையான தேவையான விஷயத்தை
பதிவாக்கி இருக்கிறீர்கள்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என
ஒரு பழமொழி சொல்வார்கள்
நல்ல மனம் என்றால் கூப்பாடே போடத் துவங்கிவிடுகிறது
அருமையான துவக்கம்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

ஆம்.குற்ற உணர்வு மேலும் குழப்பத்தையே உண்டு பண்ணும்.நம் குற்ற உணர்விற்கு நம் அருகில் இருப்பவரையே பலிகடா ஆக்கிவிடும் சூழ்நிலை கூட சமயத்தில் ஏற்பட்டு விடும்.

எனவே அதை தவிர்த்து தீர்வு காண்பதே நலம் தரும்.

குற்ற உணர்வில் இருந்து வெளியே வருவதற்கும் ஒரு சாதுர்யம் வேண்டும். பாடம் கற்று வந்தால் வாழ்க்கை - தொடரும் நாட்களில் தவறில்லாமல் இருக்கும். அருமையான கரு. அருமையாக எழுதி உள்ளீர்கள்.

குற்றமுள்ள நெஞ்சம் பற்றிய ஆரம்பமே நல்லயிருக்கு.

//அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா? // ஆமாம்.

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தமிழ்மணம்: 5 vgk

//தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன.//

குடும்பம் என்னும் அழகிய கட்டமைப்பைப் பாதுகாப்பதில் எத்தனை சிரத்தை மேற்கொள்கிறீர்கள் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி. நிகழ்காலத்துக்குத் தேவையான பல நல்லக் கருத்துக்களை மிகவும் அநாயாசமாக சொல்லிப்போகிறீர்கள். வழக்கம்போல் தெளிவாகவும் அற்புதமாகவும் எழுதுகிறீர்கள். தொடர்ந்துவரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.

தமிழ்மணம் ஏழு...

நல்ல பகிர்வு.... நன்றி

ரெவேரி said...

அருமையான துவக்கம்...
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.

மிக்க நன்றி திரு.சண்முகவேல். தங்களின் பதிவின் பார்வையும் வேறு கோணத்தை குறிப்பிடும். எதிர்பார்க்கிறேன்.

ஆதரவிற்கு நன்றி சகோ.

மிக்க நன்றி ரமணி சார். கருத்துரைகள்தான் பதிவை மேலும் முக்கியமானதாக்குகிறது.

தீர்வு காண்பதே நலம் தரும். //நன்றி ராஜி.

நல்லதொரு பதிவு

மிக அருமையான தேவையான
பதிவாக்கி இருக்கிறீர்கள்அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்பு சகோதரி
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு
மனம் மகிழ்கிறேன்.
இணைப்பு

http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_25.html

அன்பன்
மகேந்திரன்