மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

வணக்கத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா திரு.ரத்னவேல் அவர்களின், அழைப்பிற்கினங்க இந்த தொடர் பதிவினை பதிவிடுகிறேன். இது போன்ற அழைப்புகளை பதிவுலத்துடன் என்னை இணைக்கும் பாலங்களாக கருதுகிறேன். எனவே இதற்கு சந்தர்ப்பம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1.     நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
       1. பால்வெளியை பார்க்கக்கூடிய தனிமையில் இரவு வானம்
       2. விருந்தோம்பல் - இது என் கணவருக்கும் மிகவும் பிடித்த விசயம்.
       3. சிக்கல்கள் - அதுதான் என்னை உலகத்துடன் இயைந்து உயிர்ப்புடன்
           செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விசயத்தைக்
           கற்றுக் கொள்கிறேன்.
                       

2..       நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.         
            1. தலை வலிக்க வைக்கும் தற்பெருமை பேச்சுக்கள்.
                இதில் முகஸ்துதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
            2. முதியவர்களையும், குழந்தைகளையும் துன்பப்படுத்தும் செயல்கள்.
            3. அதிக சத்தமிடும் எதுவுமே பிடிக்காது.  
   

3.     பயப்படும் மூன்று விஷயங்கள்.
         1. யாரையும் வருத்தப்பட வைக்கக்கூடாது .
         2. விபத்து. அது பற்றிய செய்திகளை கேட்கக்கூட மாட்டேன்
         3. வீண் பழிச்சொல்
 

4.      உங்களுக்குப்  புரியாத மூன்று விஷயங்கள்.
       1. தீவிர நண்பர்கள் யாரும் இல்லாத காரணம் . நன்றாக பழகுவார்கள், நான் யாரிடமாவது பேசிவிட்டால் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள்.
       2. எல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது.     
       3. அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.(நிறைய கற்றும் தருகிறது.)   
   

5.      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
          1. இணையத் தொடர்புடன் கூடிய மடிக்கணினி,
          2. மாணவர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான ஒரு விருது.
          3. 'வெற்றி என்பது  நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே' என்ற வாசகம் உள்ள ஒரு ஃப்ரேம்.

6. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
       1. குழந்தைகள்தான் -. மூக்கைத் தூக்கிக் கொண்டு மூச்சை இழுத்துக் கொண்டு மழலை நியாயம் பேசுவது மிகவும் பிடிக்கும்.
       2. பாடம் நடத்தும்போது வெளியுலக சஞ்சாரத்தில் இருக்கும் மாணவர்களின் முகபாவனைகள்
       3. வீட்டிற்குள்ளேயே நடக்கும் சின்ன சின்ன கலாட்டாக்கள். முக்கியமாக புதிதாக நான் கற்றுக் கொண்ட உணவை செய்யும்போது.
   
7.  தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
       1. நண்பர்களுடன் சேர்ந்து மேலாண்மை படிப்பிற்காக ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க முயற்சிக்கிறேன்.
       2. ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்- ஒரு தனி மனிதனின் கொள்கைகளுக்கும், அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கொள்கைகளுக்குமான வேறுபாடு,  அந்த மனிதனின் வாழ்க்கைத் தோல்விக்கான காரணமாகிறதா? - Behavioural Ethics
       3. கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன் - .


8.   வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
       1. ஒரு இனிய முதியோர் இல்லம்.
       2. திருகைலாய யாத்திரை
       3. என்னுடைய கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுவது.    

9.   உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:
       1. புத்தகம் வெளியிடுவது
       2. கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது
       3. முதியோர் ஓய்வு இல்லம் ஆரம்பிப்பது.
    

10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
       1. யாரையாவது குறை சொல்லும் சொற்கள்.
       2. தீர்க்கவே முடியாத சிக்கல் என்று ஒன்றை வருணிப்பது
       3. தன்னம்பிக்கையை குலைக்கும் வார்த்தைகள்.

11) பிடிச்ச மூன்று உணவு வகை?
        1. பருப்பு உருண்டை குழம்பு
        2. பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
        3. திருவையாறு அல்வா எனப்படும் அசோகா (இனிப்பு வகைகள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும் , இதற்கு 1% மார்க் அதிகம்)

12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
        1. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா - பாம்பே ஜெயஸ்ரீ - இது ஒரு ஆன்மீக பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது.
        2. எங்களுக்குக் குறையும் உண்டு - வீரமணிதாசன் - 'மனம் தூங்க வேணும்' என்ற வரிக்காக.
        3. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.எஸ் - அவருடைய பாடல்களிலேயே இதை மட்டும்தான் என்னுடைய குரலுக்கு பாடமுடிகிறது.

13) பிடித்த மூன்று படங்கள்?
        1. பாண்டவர் பூமி - அடுத்த தலைமுறைக்கு நம்முடைய நினைவுகள்தான் பெரிய பொக்கிசம். அதற்கு ஒரு வீடு அவசியம் என்று புரிய வைத்தது.
        2. தாரே ஜமீன் பர் - மக்கு என்ற வார்த்தையே  சொல்லிக் கொடுப்பதின் குறைபாடுகளை மறைக்கும் ஆயுதம்தான், என்று நான் எப்போதும் சொல்வேன். இந்தப் படமும் அதைத்தான் சொன்னது.
        3. வீரபாண்டிய கட்டபொம்மன்- நாம் நிற்கும் சுதந்திர பூமி எத்தனையோ துயரங்களைத் புதைத்துக் கொண்டுள்ளது. அதனை மறக்கவே கூடாது.    


14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
        1. இறை பக்தி - இது இல்லையென்றால் அடுத்த அடியை எடுத்து வைக்கும் தெம்புகூட இருக்காது என்று நம்புகிறேன்.
        2. என்னுடைய  குடும்பத்தின் நலம் - இது என் மனோ தைரியத்தை பாதுகாக்கும் மந்திர சாவி
        3. உறவுகளின் தொடர்பு   - நிலச்சுமையென நான் வாழவில்லை என்பதற்கான அத்தாட்சி.
             


15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

 1. அரைகுறையாக விட்ட வீணை வாசிப்பு
 2. ஆயில் பெயிண்டிங்
 3. இன்னும் கொஞ்சம் மனோவியல்

16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
     1. தமிழ் உதயம் - திரு.ரமேஷ்
     2. வசந்த மண்டபம் - திரு மகேந்திரன்
     3. சில மணித்துளிகள்-  பிரணவன்


     நன்றி

32 comments:

அன்பு சகோதரி
முத்துக்களை மூன்று மூன்றாய்
அழகிய ஆரமாய் தொடுத்திருக்கிறீர்கள்.
அழகு.
என்னை தொடர்ந்து எழுத அழைத்ததை
பணிவன்புடன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றிகள் பல.

மூன்று விஷயங்கள் இன்னும் முடியவில்லையா...

அழகாக சொல்லியிருக்கீறீர்கள்...
வாழ்த்துக்குள்..

அப்புறம் சீக்கிறம் வீணை வாசிக்க கத்துக்கங்க...

//கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன்.//

மிகவும் நல்ல பாராட்டப்பட வேண்டிய தங்களின் இந்த எண்ணங்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சபாஷ் மேடம்.

பதிவு முழுவதுமே நல்லெண்ணங்கள் படர்ந்துள்ளது. ந்ன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

முத்தான மூன்று தொடர் - பிற தன்னம்பிக்கை தொடர் போலவே மிக சிறப்பாக தந்துள்ளீர்கள். தொடர்கிறேன்.

எல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது. //

எனக்கும் அடிக்கடி தோன்றும் குழப்பம்

கைலாய யாத்திரை சென்றுவிட்டு ...வந்து முதியோர் இல்லம் ஆரம்பித்து ...புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள் சகோ

முத்துக்கு முத்தாக
அப்டின்னு கலக்கிட்டீங்க

அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி திரு.மகேந்திரன். கருத்துரைக்கும் நன்றி

தமிழ் பதிவுலகம் மிகவும் பெரியதாக பரந்து விரிந்துள்ளதற்கு இது சிறந்த அத்தாட்சி அல்லவா? வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சௌந்தர்.

மிகவும் நல்ல பாராட்டப்பட வேண்டிய தங்களின் இந்த எண்ணங்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சபாஷ் மேடம்.
//மிக்க நன்றி VGK சார்.

ரொம்ப ரொம்ப நன்றி ராஜேஸ். திருகைலாய யாத்திரை செல்ல வேண்டும் என்பது என்னைப் போன்ற பெண்களுக்கு சற்று உயரத்திலிருக்கும் கனிதான்.. இறைவனின் அருள் கிட்ட வேண்டும்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி திரு தமிழ் உதயம் ரமேஷ். கருத்துரைக்கும் நன்றி

me the firstuவைக் காணோம். நன்றி சிவா

ரெவெரி said...

அழகாக சொல்லியிருக்கீறீர்கள்...
வாழ்த்துக்கள்...

அம்மா.... அருமையான மூன்று முத்துக்கள்...

தஙகள் பதிவுகளைக் கொண்டு தங்களைப் பற்றிய
ஒரு அபிப்பிராயம் இருந்தது
தங்களுடைய இந்த பதிவைப் பார்க்கையில்
அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை எனப் புரிந்தது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 5

மூன்றும் முத்துக்கள் தான் உண்மையாகவே! விரிவாக இருக்கிறது.

நீட்

'வெற்றி என்பது நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே'

அருமையான பதிவு. இந்த ஒரு வரியே மிக அருமை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
தங்களது பதிவை பற்றிய முழு பதிலையயும் பாராட்டுக்களையும் மின்னஞ்சலில் தருகிறேன்.
மிக்க நன்றி அம்மா.

உங்கள் எண்ணங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.

முத்தான விஷயங்களை மூன்று மூன்றாகத் தொடுத்துள்ளீர்கள். பொதுவாக இந்த வகைத் தொடர்பதிவுகள் ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அறியும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே இவற்றைப் படிக்கும்போது ஓரளவு அவரவர்கள் குணம், மனம் புரிகிறது. பாராட்டுகள்.

ரெவெரி மிக்க நன்றி

மிக்க நன்றி பிரகாஷ்

கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

மிக்க நன்றி திரு.சண்முகவேல்

மிக்க நன்றி திரு.சி.பி

இந்த வரிகள் என்னுடைய உலகத்தில் ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கவில்லை . நன்றி சார்.

நன்றி ஆச்சி

வணக்கம் முதல் வருகைக்கு நன்றி திரு.ஸ்ரீராம்

உங்கள் பதில்களில் பொதிந்திருக்கும் பல நல்ல விஷயங்களைப் பார்த்தேன். உங்கள் எண்ணங்கள் விரைவில் செயலாக என் வாழ்த்துகள், சாகம்பரி.

உங்கள் எண்ணங்கள் விரைவில் செயலாக என் வாழ்த்துகள்//மிக்க நன்றி கீதா