மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

மூச்சுக் காற்றை சுமந்தே...
வெற்று வெளியில் மிதந்து
ஏதோவொரு தடையாலோ
மற்றொன்றுடன் மோதியோ
உடைந்து மறையும் குமிழாக
அழிந்து போக விருப்பமில்லை.


மற்றொன்றுடன் மோதினாலும்
உடைந்து சிதறிப் போகாமல்
மோதியதை பலவாறாக்கும்
உள் புகுந்து அணு பிளக்கும்
கூரிய வினைதிட்பம் உள்ள
ஒரு பௌதீகத்தின் வழியாக
மோதல்களினால் பயனுற்று
அதீத ஆற்றல் கொள்கிறேன்
தொடர்ந்து வரும் பிளவுகளும்
கடி விசையுறும் துகள்களும்
சக்தியின் பிரவாகமாக மாற
உலகத்தை உயிர்ப்பிக்கிறேன்


எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.
 


32 comments:

பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.///

உண்மை தான்.... தாயணைப்பு தேவை தான்..

உங்கள் கவிதையில் உலக உற்பத்தி ரகசியத்தின் தொடகத்தை தொட்டுள்ளீர்கள்...
வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன் டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு- வாங்க ஒருமுறை எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

எத்தகைய வீரியமிக்க ஆற்றல்மிக்க
பொருளாயினும் தன்னை ஆசுவாசப் படுத்துக்கொள்ள
அதன் காரணமாக இன்னும் சக்தி பெற வீறுகொள்ள
தாய்மடிபோல் அல்லதுஉற்றவள்/உற்றவன் மடிபோல்
புகலிடம் ஒன்று வேண்டியதாகத்தான் இருக்கிறது
இது இயற்கையின் நியதி கூட
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இப்படியும் கவிதை எழுத முடியுமா என்று வியக்கிறேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ..

அழகான கவிதை அன்பைத் தேடுகின்றது!

//எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.//

எப்போதாவது அல்ல,
எப்போதுமே கிடைக்க
என் மனம் ஏங்குகிறது, மேடம்.

மிகவும் அருமையான கவிதை.
அழகழகான வரிகள்.

படித்ததும் கோழியின் மடி குஞ்சுக்குக் கிடைத்தது
போல என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். vgk
[4 to 5 in தமிழ்மணம்]

பெண்ணின் உறுதி மிக்க உளத்தை அணு உலையென உருவகப்படுத்தி ஆற்றல் பெருக்கும் வித்தையை அழகிய கவிதை மூலம் கொடுத்து அன்பின் தேவையையும் அரவணைப்பையும் அதனுடன் பின்னிச் சொன்ன விதம் அழகோ அழகு. பாராட்டுகள் சாகம்பரி.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞான வரிகளை அன்புடன் பிசைந்து அரவணைப்பாக கவிதையாக தந்தமையை நினைத்து வியக்கிறேன்.... நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ

//மோதியதை பலவாறாக்கும்
உள் புகுந்து அணு பிளக்கும்
கூரிய வினைதிட்பம் உள்ள
ஒரு பௌதீகத்தின் வழியாக
மோதல்களினால் பயனுற்று
அதீத ஆற்றல் கொள்கிறேன்//

அணுவியக்கக் கொள்கைகளை
கவிதையில் நாசூக்காக ஏற்றியிருக்கிறீர்கள்,
பேராசிரியர் அல்லவா ??

நாட்டின் தூண் போன்ற வருங்கால சந்ததியரை
அறிவினராய் உருவாக்கும் உம்போன்ற ஆசிரியர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஆசிரியர் தினத்தன்று கற்பிக்கும் திறனில் வல்லவர் நாங்கள் என்பதை நிருபிக்கிறது தங்கள் கவிதை.அன்பை வேண்டி இப்படியும் எழுதமுடியுமா என வியக்கிறேன்.வணக்கமும்,வாழ்த்துகளும்.

பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.

அழகு கவிதை
அருமையான வரிகள்
மனப்பூர்வ வாழ்த்துக்கள்

//உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.//

இந்த வரிகளை எழுதும்போது உங்கள் அன்னையை நினைத்தீர்களா?

உண்மைதான். நன்றி பிரகாஷ்

நன்றி திரு.தீரன். வந்தேன். தொடர்ந்து வருகிறேன்.

சொல்லுவதற்கும் மேல் கவிதையை கொண்டு செல்லும் திறன் தங்களுக்கே உரியது ரமணி சார்(கவி மனம்!)

ஏதோ ஒரு உணர்வு பிடறியை பிடித்து தள்ளும்போது இப்படி எழுதத் தோன்றும். நன்ரி திரு.ரமேஷ்.

நன்றி. நன்றி சிவா.

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு.நேசன்

உண்மைதான் சார், அன்னையின் அன்பு எப்போதும் கிட்ட விருப்பம்தான். மிக்க நன்றி சார்.

மிக்க நன்றி கீதா. இந்த கவிதைக்கு ரமணி சார் போல் மிக அழகான விளக்கவுரை தந்துள்ளீர்கள்.

ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.மகேந்திரன்.

ஓ.. பாராட்டிற்கு நன்றி ஆச்சி.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.

உண்மைதான் திரு.சண்முகவேல். என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைக்கும்போதெல்லாம் என் அன்னையை நினைத்துக் கொள்வேன்.

சக்தியில் பிரளயமாகவும், அன்பில் மென்மையையும் வேண்டி....நல்ல கவிதை.

வை கோபாலகிருஷ்ணன் ...

//எப்போதாவது அல்ல,
எப்போதுமே கிடைக்க
என் மனம் ஏங்குகிறது, மேடம்.
படித்ததும் கோழியின் மடி குஞ்சுக்குக் கிடைத்தது
போல என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது//


நானும் இங்ஙனமே உணர்கிறேன்.

கவிதையின் சக்தி பிரவாகமாக பெருக்கெடுத்துள்ளது

இறைவா!இப்படி ஒரு எழுத்து எழுத எனக்குள்ளும் சக்திப் பிரவாகத்தை தந்தருள்!

ரெவெரி said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...ரசித்தேன்...
ரெவெரி

மிக்க நன்றி ஸ்ரீராம்

பாராட்டுக்களுக்கு நன்றி ராஜி.

மிக்க நன்றி ரெவரி.