மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்




தடுப்பார் யாருமின்றி பற்றற்று
ஒரு காற்றாக நான் திரிந்தேன்
சேருவதற்கு இடமில்லாமல்
ஆகாயத்தில் தனித்து திரிந்தேன்

நெருப்புடன் சேர்ந்து பார்த்தேன்
சுற்றியிருப்பவற்றை கொளுத்தி
சிறிய தீயை தூண்டி அழித்தது
காற்றுதான் என்று ஏசினார்கள்


கடலுடன் சேர்ந்து பார்த்தேன்
ஆழிப்பேரலையாகி ஆடினேன்
உயிர் பலிகொண்ட கருவியான
பழிச்சொல்தான் மிச்சமானது.

இனம் இனத்தோடு சேரலாமே
காற்றோடு சேர்ந்து பார்த்தேன்
சூறாவளியாகி சுழன்று வீசிட
மிச்சமும் மீதியின்றி பறந்தது.

வெறுத்துப்போன வேளையில்
சுழன்றாடும் சோழியை பிரித்து
பல்லாங்குழி ஆடுவது போல்
சீற்றம் குறைத்து தணிந்தேன்

சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.

28 comments:

எப்படியோ கடைசியில் இடம் சேர்ந்தாகி விட்டது.நன்று.தமிழ்மணத்தில் உங்களுக்கு நீங்களே ஒரு ஓட்டு போட்டுக்கொள்ளலாம்.

நல்லதொரு கவிதை.
சீற்றத்துடன் சேர்ந்த நம்மை சீந்துவார் யாருமில்லை. ஒரு
மாற்றத்துக்காக, இசையாகி, தென்றலாகி, நறுமணத்துடன் கமழும் மூச்சுக்காற்றான போது, மூச்சுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறோம். எனவே சீற்றத்தை மறப்போம் என அழகாகச் சொல்லியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். தமிழ்மணம்: 2 to 3 vgk

அருமை அம்மா... இறுதி வரிகளில் காற்றின் தேவையை நல்லா சொல்லியிருகிங்க...

அழகான கவிதை.வார்த்தைகளும்,பொருளும் தென்றாலாக உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

எந்த பிறப்பாக இருந்தாலும், விரும்பிய வண்ணம் வாழ முடிந்தால் சிறப்பு தான். மாறுப்பட்ட கற்பனையில் மலர்ந்த நல்ல கவிதை.

அருமை. எதனுடன் சேர்ந்தால் பெருமையும் பயனும் என்பதை
இப்படி ஒரு கவிதையாய் ................
பகிர்விற்கு நன்றி

வார்த்தைகள் சதிராட்டம் போட்டிருகின்றன
உங்கள் கவிதையில்
ரசித்தேன் சகோதரி.

சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.//

துன்பங்கள் தந்தவற்றை ஏசவே செய்வோம்... இதோ இதமாக வந்த மூச்சுக்காற்றே....சீராக என்னை தாலாட்டியமைக்கு நன்றி..... அற்புதமான காற்றின் கவிதை தென்றலாய் வீசியது மழைச்சாரலுடன் அனுபவித்தேன்....அருமை சகோ

தமிழ் மணம் 6

சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.

அழகு வரிகள்.
அழகு கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

ஊழிக்காற்றையும் உயிர்மூச்சாக்கும் வித்தை கண்டு மக்ழிந்துபோனேன். சேருமிடமறிந்து சேருவதில் சிறப்பு என்று உணர்த்திய கவிதைக்கு என் பாராட்டுகள், சாகம்பரி. சொல்லாடலிலும் சுழன்றடிக்கிறது கவிக்காற்று சூறையாய்!

கவிதையில் காற்று ஒரு குறியீடாக பயன்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அனுபவங்களால் பண்படுத்தப்பட்ட ஒரு மனதின் பயணமாக நிறைவுவரிகள் நிறைவாய்...

முதல் வருகைக்கும் தமிழ்மண ஓட்டிற்கும் நன்றி திரு.சண்முகவேல்.

//எனவே சீற்றத்தை மறப்போம் என அழகாகச் சொல்லியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.// கருத்துரை உண்மைதான். சீற்றத்தை ஒரு அதீத சக்தியை தருகிறது. தனை மிகச்சரியாக கட்டுப்படுத்தினால் ஆக்க சக்தியாகும். மிக்க நன்றி சார்.

நன்றி பிரகாஷ்.

பாராட்டிற்கு நன்றி ஆச்சி.

மிக்க நன்றி திரு.ரமேஷ் - தமிழ் உதயம்.

அருமை. எதனுடன் சேர்ந்தால் பெருமையும் பயனும் என்பதை
இப்படி ஒரு கவிதையாய் ................
பகிர்விற்கு நன்றி //நன்றி ராஜி

//ரசித்தேன் சகோதரி. // நன்றி சகோ. மகேந்திரன்

இதோ இதமாக வந்த மூச்சுக்காற்றே....சீராக என்னை தாலாட்டியமைக்கு நன்றி..... //மிக்க நன்றி திரு.ராஜேஸ் .

வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

பாராட்டிற்கு நன்றி கீதா

காற்று ஒரு குறியீடாக// சரிதான். கருத்துரைக்கு நன்றி திரு.சிசு.

சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்./

அழகான வரிகள். பாராட்டுக்கள்.

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

பருமனும் சக்தியும் பிரமிப்பூட்டலாம்
மிரட்டலாம் ஆயினும் ஆற்றலைவிட
அழிவே அதன் அதிக விளைவாக இருக்கிறது
தன்னை உணர்தலும் சக்தியின் ஒழுங்கமைவுமே
நமக்கு உன்னதங்களை அறிமுகப் படுத்திப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

த.ம 9

அருமை. ருத்ர தாண்டவம் ஆனந்த தாண்டம் ஆவது போல...! சேருமிடம் பொறுத்துதான் சீரும் சிறப்பும்.