அதற்கு முன் சிக்கலை தீர்க்க முடியும் என்ற 'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்' இருக்க வேண்டும் . இதுவும் மகாகவியின் வார்த்தைகள்தான். பிரச்சினையிலேயே ஆழ்ந்து கொண்டு பலவீனமடைந்து நிற்பவர் மாக்களுக்கு சமம் என்கிறார். உள் வலி என்பது மனதில் ஏற்படும் தாக்கம் அதுதான் தாண்டி குதிக்க தூண்டும். உண்மையில் பற்று என்பது எப்போது வரும்? நம் செயல்களில் நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிட்டும்.
பிரச்சினையை மனதளவில் பகுத்தாய்வு செய்ய வேண்டும். 360 டிகிரி மதிப்பிடல்தான். பல கோணங்களில் பார்க்கும்போது அதன் முழு பரிமாணம் பலம், பலவீனம் ஆகியன தெரியும்.இது போன்ற திறனாய்வு செய்யும் போது என் நண்பர் முற்றிலும் தனக்கு எதிராக சிந்திக்கும் எதிர்போக்கு நபரை உடன் வைத்துக் கொள்வார். அடுத்த கட்டம் செல்லும் போது அந்த நபரை கழட்டி விட்டு விடுவார். வேறுபட்ட கோணங்களை பார்க்க இது உதவும். உண்மையில் ஏன் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்பதற்கான பலமான காரணங்கள் கிட்டும். முடியாது என்பதற்கான காரணங்கள்தான் முடியும் என்பதற்கான பதிலை தேடும். வெற்றிக்கான வரைபடம் கிட்டிவிடும்.
அதென்ன சாணக்கிய தந்திரம்? பிரசித்தி பெற்ற நந்தப் பேரரசை அழித்து சந்திரகுப்த மௌரியரின் தலைமையில் குப்தப் பேரரசை நிறுவியதில் சாணக்கியரின் பங்கையும் அரசியல் தந்திரங்களையும் வரலாறு பெருமையாக பேசும். சந்திரகுப்தரை பேரரசராக உருவாக்கிய பெருமையும் அவரையே சார்ந்த்து. ஆனால், ஆரம்பகாலத்தில் இளைஞனாக இருந்தபோது சந்திர குப்தர் நாடிழந்து அகதியாய் காட்டில் திரிந்தார். தட்சசீலத்திலிருந்து வெளியேறிய சாணக்கியரும் காட்டில்தான் சந்த்தித்தார். சந்திர குப்தரின் நம்பிக்கை மிக்க போராளிகளைக் கொண்டு மகதத்தின்மீது படையெடுப்பதும் தோற்பதும் மீண்டும் காடு திரும்புவதும் நடைபெற்றகாலம் அது. தோல்வியின் காரணம் புரியாமல் காட்டில் திரிந்தனர். எப்போதாவது ஏற்படும் பசி அப்போதும் தோன்றியது. காட்டில் சிறு குடிசையை கண்டனர். அதில் ஒரு கிழவியும் சிறு வயது பேரனும் வசித்து வந்தனர். அவளிடம் உணவு கேட்டபோது, யாரென்று தெரியாமலே , சற்று பொறுத்திருக்கும்படியும் தானிய அடை செய்து தருவதாகவும் கூறினாள். சற்று பொறுத்து சுடசுட அடையும் வந்தது. பாட்டியின் பேரனும் உடனமர்ந்து உண்ண முற்பட்டான். மிகவும் சூடாக இருந்த அடையில் கை வைத்து விட்டு ' ஆ' என்று அலறினான். "உண்ணும் தந்திரம் தெரியாமல், நீயும் அந்த சாணக்கியன் போலவே முட்டாள்தனம் செய்கிறாயே." அந்த கிழவியின் அதட்டல் சாணக்கியரை திடுக்கிட வைத்தது. முட்டாளா சாணக்கியரா? கோபம் கொள்ளாமல் விளக்கம் கேட்டார். அந்த கிழவி சொன்ன பதில்தான் பின்னாளின் புகழ்பெற்ற குப்தப்பேரரசை நிறுவியது.
"ஐயா, அடையின் நடுப்பகுதி சற்று தடிமனானது, ஓரத்தில் மெலிந்து இருக்கும். எனவே அடையின் நடுப்பகுதியைவிட ஓரத்தில் சூடு விரைவில் தணிந்துவிடும். எனவே ஓரத்தில் இருந்து அடையை பிய்த்து உண்ண ஆரம்பிக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் தலை நகர் அரசர் இருக்கும் இடமாகையால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் எல்லை பகுதியில் காவல் குறைவாக இருக்கும். அங்கே போர் தொடுத்து சிறிது சிறிதாக முன்னேறாமல் நேரிடையாக தலை நகரை தாக்கி தோற்றுவிடுகிறார். இது முட்டாள்தனம்தானே". உண்மையே. இதனை பின்பற்றி சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.
இதே முறையை பிரச்சினையை சரி செய்யவும் கையாளலாமா? நாளைய பதிவில் தொடரலாம்.