ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமே. இல்லத்தை பிரித்து போட்டு இருப்பதையும் இல்லாததாக்கி செல்வது மனைவி நினைத்தால்தான் முடியும்.
அதேதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. முன்பெல்லாம் விவாகரத்து என்றால் சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் இப்போது நம்பமுடியாத காரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன. பத்து பொருத்தங்கள் என்று சொல்லப்படும் காரணங்களின் அடிப்படையானது இந்த தவிர்க்க முடியாத காரணங்களை சுட்டுகின்றன உதாரணமாக கோபம் கொள்கின்ற குணம் எனில் சாந்தமாக இருக்கும் குணாதிசயம் பொருத்தமாக கருதப்படும். எதுவும் இல்லாமல் ஏன் இந்த மணப்பிரிவுகள். இதற்கு என்னவெல்லாம் காரணமாகிறது என்று பார்க்கலாம்.
1. பெண்ணின் வாழ்வியல் முறைகள் மாறிப்போனது.
2. பெற்றோரின் எதிர்பார்ப்புகள் திசைமாறியது.
3. நொடிகளையும் பேரம் பேசும் பொருளாதாரம்
4. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு தரும் வாழ்வியல் சிந்தனைகள்.
ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம். எல்லா திசையிலும் அலசினால்தானே ஒரு முடிவிற்கு வரமுடியும். ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன். அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக...