மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பதிவுலகத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு கடிகார முட்களில் கட்டப்பட்டுள்ளது. அவை என்னை சுதந்திரமாக விடுவிக்கும் சொற்ப நேரங்கள் மட்டுமே (மின் தடையில்லாமலும் இருக்க வேண்டும்) பதிவுலகத்தில் வாழ்கிறேன்,. மலைச்சாரலில் மேற்கொள்ளும் இனிய பயணம் போல அது அமைந்துவிடுகிறது. மனதில் உள்ள ஏராளமான சிந்தனைகளை இறக்கி வைத்து புத்துணர்வு பெற இந்த டிஜிட்டல் சஞ்சாரம் அவசியமாகிறது. இதில் இனிமையான நண்பர்கள், பிடித்தமான வலைப்பூக்கள், புதிதான பல விசயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில் பதிவுகளை எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள். ஒரு நதி போல கரையோர அழகுகளை ரசித்துக் கொண்டும், பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டும் என்னுடைய பதிவுலகப் பயணம் இருக்கிறது.

நல்லது, இப்போது என்ன விசயம் என்கிறீர்கள்தானே?. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.

1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.
2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.

இவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும்  தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை
பிடிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும்  கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்

1.   THE VERSATILE BLOGGER AWARD 


இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவ
ர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

எனக்குப் பிடித்த விசயங்கள்.

வாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.


1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.

2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் மனசு  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.

3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் தங்கம் பழனி   அவர்களுக்கு,

4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் திரு.தமிழ் உதயம்  அவர்களுக்கு,

5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கா
அழகிய பதிவுகளை வெளியிடும் காணாமல் போன கனவுகள்   ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.




2. Liebster விருது.


எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது.  அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.


1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் ஆழ்கடல்களஞ்சியத்திற்குசொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,

2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின்  திருமதி.காஞ்சனா அவர்களுக்கு

3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் புதிய வசந்தம்  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,

4. காரச்சாரமா
விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள்  மதுரைத் தமிழன் அவர்களுக்கு,

5.  உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான மறக்க முடியாத நினைவுகள்   வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன்  அவர்களுக்கு

மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன்.  வாழ்த்துக்கள்.

இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான விசயமாக இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன். .

அவர்கள் அனைவரும் இரண்டிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். பெரும்பாலும் அவர்கள் சுட்டித்தனமான குழந்தைகள். துருதுருவென இருக்கிறார்கள். பளுமிக்க பொருளை இழுப்பதை பார்க்கும்போது  அதிக வலு இருக்கிறதும் தெரிகிறது. ஒரு பட்டாம் பூச்சியின் பரபரப்பு தெரிகிறது. அறிவு கூர்மையும் கவனிக்கத் தக்கது - ஒரு செயலை நாம் செய்வதை பார்த்துவிட்டால் கூர்ந்து கவனித்து செய்ய முயற்சிக்கின்றனர். இதெல்லாம் நேர்மறையான விவரங்கள்.

ஆனால் எதிர்மறையாக, சிறிய விசயத்திற்கும் மூட் அவுட் ஆவது. அடம் பிடிப்பது. பெருங்குரலெடுத்து அழுவது. ஒல்லியான தேகம். எரிச்சலுற்ற முகபாவங்கள்... இதெல்லாம் சாதாரணமாகவே குழந்தைகளிடம் இருப்பதுதானே என்று சொல்கிறீர்கள்.  ரொம்பவும் சாதாரணம்தான். ஆனால் அடிக்கடி நிகழ்வது என்பதும் குழந்தைக்குரிய மனோபாவம் மாறுவதும் கவனிக்க வேண்டிய விசயமல்லவா? இன்றைய அவசர காலகட்டத்தில் இவற்றை நாம் கூர்ந்து நோக்குவது இல்லை.

இன்னும் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது புரிகிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுகிறது. மருத்துவரின் கவனிப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஒரு விசயத்திற்காக அடம்பிடிக்கும்போது வேறு போக்கு காட்டி மாற்ற முடிவதில்லை. ஞாபகமாக மீண்டும் அடம் பிடிப்பதை தொடர்கின்றனர்.

வினு மூன்று வயது குழந்தை. படு சுட்டி. நிறைய பேசுகிறாள். எழுத முயற்சிக்கிறாள். பாடல்களுக்கு அழகாக நடனமாடுகிறாள். ஆனால், அவள் சொன்னதை நாம் செய்யவில்லை எனில் - கவனியுங்கள் நாம் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதல்ல விசயம் - எரிச்சலூட்டும் செயல்களை செய்கிறாள். பொருட்களை வீசி எறிவது. கத்துவது. தரையில் படுத்து உருள்வது. (விறுவிறுவென்று பூஜை அறைக்குள் சென்று குங்குமத்தை கொட்டுவது). அவளுடைய பெற்றோர் பயந்து போய் அவள் சொல்வதை செய்கின்றனர். உடனயே சமாதானம் ஆகி சிரித்து கொஞ்சுகிறாள்.

நான்கு வயது அர்சுன் இதே போலத்தான். கோபம் வந்தால் கத்துவதில் எங்கள் காலனியே அதிரும். கூடவே புரியாத வார்த்தைகளில் அவன் அம்மாவை திட்டவேறு செய்வான். என்னுடைய இந்த வயது நண்பர்கள் ஓரிருவர் தவிர பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், என்னிடம் விளையாடும்போது இத்தனை கலாட்டா இல்லை. அவர்களுடைய பெற்றோர் ஆச்சரியமுடன் 'உங்களிடம்தான் அடக்கமாக இருக்கிறான்" என்று கூறுகின்றனர்.  ஏன்? ஒரு விசயம் புலப்பட்டது இதனை என்னுடைய ஹோமியோ மருத்துவரும் உறுதிபடுத்தினார். அவை,

1.  சொல்லத்தெரியாத பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. இந்த பொம்மை வேண்டும், இந்த பாட்டு போடுங்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால், சிலவற்றை உணர முடிவதில்லை. முக்கியமாக பசி,உறக்கம் மற்றும் சத்து குறைவு. (இவர்கள் பொருளாதார வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்)

2.  கிட்டதட்ட அனைவருமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் குடிக்கிறார்கள். அந்த பானம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. (பாலின் விலையைவிட அதிகம். உபயோகிப்பதும் அதிகரிக்கிறது.)

3.  சில குழந்தைகள் சரிவர சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட குடிக்கின்றனர். பெரியவர்களுக்கான ஆரோக்கிய பானத்திலேயே ஒரு நாளைக்கு இரு முறை என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எத்தனை முறை தருவது என்று குறிப்பிட வேண்டாமா?

4. உண்மை என்னவெனில், உணவை மறுக்கும் குழந்தையை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் முயற்சியினை அம்மாக்கள் செய்வதில்லை. "அவன் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று கூறிவிடுகின்றனர். நாலுவயது பையன் அரை தோசை சாப்பிடுகிறான். இது எப்படி அவனுக்கு போதும்?  மேலும் அவன் ஒரு துருதுரு குழந்தை.  விசாரித்தால், ஊட்டசத்து பானத்தை தருவதாகவும் அது சக்தி தருவதாகவும் சொல்கின்றனர். இது சரியான கருத்தா?

5. போதுமான உணவு உட்கொள்வது அவசியம் என்றும், அதிலிருந்து ஊட்டச்சத்துகளை உடல் பெற வேண்டும் என்பதும் அவசியம், அதுதான் உள்ளுறுப்புகள் பலப்படுவதற்கு தேவையானது என்கிறார் மருத்துவர்.

6. சில அமைதியான குழந்தைகளின் பின்னனியில் குழந்தைக்கு பொறுமையாக ஊட்டுவது, முக்கியமாக குழந்தைக்கு ஏற்ற உணவை தயார் செய்வது, சரியான அளவில் உறங்கச்செய்வது , போதுமான விளையாட்டு , கனிவான கண்டிப்பு என்று கவனிப்புகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

7. சத்திற்கு ஊட்டச்சத்து பானமும் பசிக்கு பிஸ்கெட், கொறிப்பு தீனிகள் போன்றவை மட்டும் போதுமா? இந்த அரை தோசை, மூன்று ஸ்பூன் சாதம் போன்றவை போதாது என்பது என் கருத்து. கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது, சரிதான். ஆனால் விளையாட்டு காட்டியாவது ஊட்ட வேண்டாமா?

8. ஒட்டிய வயிறுடன், சட்டென்று சோர்வைடைந்து சிணுங்கிக் கொண்டேயிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?


என்னிடம் மட்டும் அடம்பிடிப்பது இல்லை என்று சொன்னேனல்லவா, ஏன் என்றால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே குட்டி குட்டி தட்டுகளில் உணவுப் பொருட்களை நிரம்ப்பிவிடுவேன். சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தால் விளையாட்டாக கதை சொல்லி ஊட்டிவிடுவேன். வயிறு நிறைந்திருக்கும்போது கோபம் வராது என்பது அறிவியல் உண்மை.

இந்தப் பதிவு முடிந்த பின் விவாகரத்து பற்றிய தொடரை தொடர்கிறேன்.