மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பதிவுலகத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு கடிகார முட்களில் கட்டப்பட்டுள்ளது. அவை என்னை சுதந்திரமாக விடுவிக்கும் சொற்ப நேரங்கள் மட்டுமே (மின் தடையில்லாமலும் இருக்க வேண்டும்) பதிவுலகத்தில் வாழ்கிறேன்,. மலைச்சாரலில் மேற்கொள்ளும் இனிய பயணம் போல அது அமைந்துவிடுகிறது. மனதில் உள்ள ஏராளமான சிந்தனைகளை இறக்கி வைத்து புத்துணர்வு பெற இந்த டிஜிட்டல் சஞ்சாரம் அவசியமாகிறது. இதில் இனிமையான நண்பர்கள், பிடித்தமான வலைப்பூக்கள், புதிதான பல விசயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில் பதிவுகளை எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள். ஒரு நதி போல கரையோர அழகுகளை ரசித்துக் கொண்டும், பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டும் என்னுடைய பதிவுலகப் பயணம் இருக்கிறது.

நல்லது, இப்போது என்ன விசயம் என்கிறீர்கள்தானே?. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.

1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.
2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.

இவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும்  தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை
பிடிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும்  கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்

1.   THE VERSATILE BLOGGER AWARD 


இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவ
ர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

எனக்குப் பிடித்த விசயங்கள்.

வாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.


1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.

2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் மனசு  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.

3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் தங்கம் பழனி   அவர்களுக்கு,

4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் திரு.தமிழ் உதயம்  அவர்களுக்கு,

5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கா
அழகிய பதிவுகளை வெளியிடும் காணாமல் போன கனவுகள்   ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.




2. Liebster விருது.


எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது.  அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.


1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் ஆழ்கடல்களஞ்சியத்திற்குசொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,

2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின்  திருமதி.காஞ்சனா அவர்களுக்கு

3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் புதிய வசந்தம்  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,

4. காரச்சாரமா
விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள்  மதுரைத் தமிழன் அவர்களுக்கு,

5.  உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான மறக்க முடியாத நினைவுகள்   வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன்  அவர்களுக்கு

மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன்.  வாழ்த்துக்கள்.

இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.

23 comments:

எந்த விருதுக்கும் தகுதி பெற்றவரான நீங்கள் அதைத் தகுதியானவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருப்பதைக் கண்டு நானும் மகிழ்கிறேன். விருது தந்த உங்களுக்கும், உங்களால் விருது பெற்றவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

மிகச் சிறந்த பதிவுகளைத் தரும் தாங்கள்
விருது பெற்றமைக்கும்
அனைவரும் விரும்பித் தொடரும்
அருமையான பதிவர்களுடன் விருதினைப் பகிர்ந்து
கொண்டமைக்கும் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

வணக்கம் சகோதரி,
விருது பெற்ற உங்களுக்கும் உங்களால்
விருது கொடுக்கப்பட்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.

மிகத்தகுதி வாய்ந்த தாங்கள், எங்களால் அளிக்கப்பட்ட இவ்விரு விருதுகளையும் ஏற்றுகொண்டதால், அந்த விருதுகளின் பெருமையும் மதிப்பும் அதிகரித்துள்ளன என்பேன்.

அதற்கு உங்களுக்கு முதலில் என் நன்றிகள், மேடம்.

தங்களால் இன்று இந்த விருதினைப் பெறும் அதிர்ஷ்டசாலிப் பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன் vgk

//என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. //

என்னைப்போலவே ஒருவர் என்பதில் எனக்கு ஓர் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

2012 பிறந்ததிலிருந்து தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் ஆகிய வோட்டுப்பட்டைகளே என் வலைப்பதிவில் காணாமல் போய் விட்டன.

நான் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை.

பிறர் தான் கவலைப்பட்டு அவ்வப்போது என்னை விசாரிக்கிறார்கள்.

Just for your information, please.

தாங்கள் இந்த இரு விருதுகளை பெற்றமைக்கும்,மற்ற பதிவர்களுக்கு வழங்கியுள்ளதற்கும் வாழ்த்துகள் மேடம்.

எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி

வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி

விருதை என் பிளாக்கில் வைத்து விட்டேன்.

விருதுகள் பெற்ற உங்களுக்கும் உங்களால் விருதுகள் பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.எனக்கு நீங்கள் கொடுத்த இந்த விருதைவிட நீங்களும் என் தளத்தில் வந்து படித்து கருத்துக்களை உங்களுக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் வழங்கி வர்கிறீர்களே அதுதான் மிகப் பெரிய விருதுவாக நான் கருதுகிறேன். அதுமட்டுமல்ல உங்களை போன்ற பெண்களும் எனது தளத்திற்கு வந்து படிக்கீறிர்கள் என்பதுதான் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது அடுத்த பதிவை கண்டிப்பாக படித்து கருத்து இடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். நான் வலை உலகத்தில் 'மிகவும் அதிகமாக மதிக்கும்" இரு வலைத்தள பதிவாளர்கள் பற்றி சொல்ல போகிறேன். அதனால் நீங்கள் வரவேண்டுகிறேன்.

This comment has been removed by the author.

தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கெல்லாம் விருதுகள் தானே..!

'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற முதுமொழிக்கேற்ப தாங்கள் பெற்ற இவ்விருதுகளை, தங்களுக்குப் பிடித்த தரமான வலைப்பூக்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

எம்முடைய வலைப்பூவுக்கும் விருது கொடுத்து பெருமை சேர்த்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகை கொள்கிறேன்.

விருது பெற்ற மற்ற சகோதர- சக பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

தொடர்ந்து தங்களது ஆக்கங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுபிள்ளையாய்..

உங்கள்,
தங்கம்பழனி.

இதுவரை யாரும் பெறாத , முதன் முதலாக ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_09.html

தங்கள் திறமையின் முன் விருதுகள் ஒரு பெரிய விஷயமே இல்லையென்ற போதும் அவை அன்பின் அடையாளம். எழுத்துக்களின் அங்கீகாரம்! விருதுகள் பெற்றதற்கும் அவற்றை ஏற்றவர்களுக்கு வழங்கியதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சாகம்பரி.

வாசிக்கும் மனங்களை சுய பரிசோதனை செய்யத்தூண்டும், வாசகர் வாழ்வில் ஏற்றமுண்டாக்கும் தங்கள் பதிவுகளே எங்கள் அனைவருக்குமான விருதுகளாய் அமைகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தொடரட்டும் அருமையான அர்த்தமுள்ள பதிவுகள்.

தாங்கள் விருது பெற்மைக்கும் அந்த விருதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்கள்.

என்னைப் பற்றி சிறு குறிப்பு வழங்கி எனக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றி சகோதரி.

நன்றி சாகம்பரி. சில நாட்களாய் எதுவும் எழுதாமல் இருந்த எனக்கு - இந்த விருது ஊக்கத்தை தந்து தொடர்ந்து எழுத தூண்டியுள்ளது.

எனக்கு விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி.

இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்."வாழ்த்துகளும்...

தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்க...

தாங்கள் அளித்துள்ள விருதால் மிக்க மகிழ்ச்சி அம்மா....

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

பிள்ளைக்க்கு பிராக்டிக்கல் பரிட்சை இருந்ததால் உடனே தங்கள் விருதை ஏற்க வர முடியலைங்க தோழி. விருதை ஏற்றுக் கொண்டு நாளை, ஐந்து பதிவர்களுக்கு கொடுத்து பதிவிடுகிறேன் தோழி

விருது வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி சாகம்பரி அவர்களே! பொறுபுணர்வு மேலும் எனக்கு கூடுகிறது. நல்ல பதிவுகளை மட்டுமே தந்து வாசகர்களை ஈர்க்கும் பேராசையும் எழுகிறது. இந்த விருதை கண்டிப்பாக எனக்குப் பிடித்த ஐந்து பதிவர்களுக்கு வழங்கி மகிழ்வேன்.

எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி அக்கா....



விருதுகள் பெற்ற உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் தளத்திற்க்கு நீங்கள் கொடுத்த இந்த விருதைவிட நீங்களும் என் தளத்தில் வந்து படித்து மிகிழ்வது இன்னும் மகிழ்ச்சி அக்கா.....


குறிப்பு:

மன்னிக்கனும் நான் இப்பொது தான் என் தளத்தை ஒப்பன் செய்து பார்த்தேன். அதனால் தான் உங்ளுக்கு வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது அக்கா...

சகோதரி தாங்கள் பெற்ற விருதுகளிற்கும், தாங்கள் கொடுத்தவர்களிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை நாட்கள் பிந்திக் கூறுகிறேன். வலைச்சர அறிமுகம் நினைவு வந்து , அதை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு வந்தேன். மேலும் பல விருதுகள் பெற்றுச் சிறக்க வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

'விருதும் மருந்தும் ஒன்று'. இரண்டும் மனிதனை நலமுடன் வாழ வழிவகுக்கும்.