மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

காற்றுக்கும் காற்றுக்கும்
வெள்ளி சுவரெழுப்பியே
இறகு பந்தாகி துள்ளிட,
சூரியனின் தூரிகையில்
ஏழு வர்ணம் கொண்டு
பளபளத்து பறக்கிறேன்.
இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது


நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.

குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்
ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !






35 comments:

//ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !// அருமை.

கவிதை மிக அருமை...

//பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்//

அன்புக்காக ஏங்குவோர் அனைவருமே அந்த அற்ப ஆயுள் உள்ள நீர்குமிழி போலவே தான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அன்பு கிடைக்காமல் நாமும்(மனம்) உடைந்து போகிறோம் அல்லவா!

அருமையான அழகான வானவில்லின் நிறங்களுடன் கூடிய அந்த உடையாத நீர்க்குமிழி போலவே உள்ளது, உங்களின் இந்தக்கவிதை வரிகள் அனைத்துமே. பாராட்டுக்கள். vgk

தமிழ்மணம்: 3 vgk

அருமை. மிக அழகாக முடித்துள்ளீர்கள்.

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !

அருமையான வரிகள் சகோதரி...
இது தமிழச்சி என்ற ஒரு பெண் பதிவரின் சர்ச்சைக்குரிய வரிகளை ஏனோ நினைவுபடுத்துகிறது...

மொத்தத்தில் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி...

//வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.//

இனிய நடையில் எதார்த்தமான கவிதை வரிகள்.

எளிதில் யாருக்கும் கிடைக்காத கரு.. கலக்கல் கவிதை சகோ

அழகாய் ஒரு கவிதை..

குழந்தைமனம் கொண்ட காற்றுக் குமிழிலில்தான்
வசீகரிக்கும் வண்ணங்கள் தோன்றும்
அதுமட்டுமல்ல சமயத்தில் இரும்பு மனங்களைக் கூட
அது உடைத்து நொறுக்கிவிடவும் சாத்தியமுண்டு
அருமையான படைப்பு தொடர வாழ்த்துக்கள்
த.ம 9

உருவாக்கிவிட்டக் குழந்தையின் உடைபடும் மனத்தைப் பார்க்கவிரும்பாத, ஒரு அழகிய காற்றுக்குமிழியின் எண்ணம் சிறப்பு. சில குடும்பங்களில் குடும்பம் என்னும் கட்டமைப்பே உடைபட்டுவிடுகின்றது இரு சமபலங்கொண்ட ஈகோவென்னும் குமிழ்களின் மோதலால், கூடவே உடைபடும் குழந்தையின் எதிர்காலம் பற்றிய பிரக்ஞையற்று. பல அர்த்தங்களை உள்ளடக்கிய அழகான கவிதை, சாகம்பரி.

இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது//

அழகான கவிதை..வாழ்த்துக்கள்

முதல் வருகைக்கு மிக்க நன்றி திரு.சண்முகவேல்.

மிக்க நன்றி திரு.ராஜா

அருமையான அழகான வானவில்லின் நிறங்களுடன் கூடிய அந்த உடையாத நீர்க்குமிழி போலவே உள்ளது, உங்களின் இந்தக்கவிதை வரிகள் அனைத்துமே. பாராட்டுக்கள்// அன்பு மட்டுமே வேண்டும் உள்ளங்கள் சுமையின்றி சுகமாக இருக்கும். பாராட்டுக்களுக்கு நன்றி VGK சார்.

மிக்க நன்றி திரு.ரமேஷ்.

Rathnavel
அழகு கவிதை.
வாழ்த்துக்கள். //கவிதையை சிறப்பித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி சார்.

பாராட்டிற்கு நன்றி சகோ. பக்கத்து வீட்டு குட்டிப் பையனுக்காக, சோப்பு நீரில் குமிழ் உருவாக்க முயன்று தோல்வியுற்றபின் எழுதிய கவிதை இது.

கவிதை தந்தால் குயில் இவ்விடம் பறக்கும் என்று புரிகிறது. நன்றி கடம்பவனக் குயில்.

மிக்க நன்றி ராஜேஸ். சிரிக்கவும், மிதக்கவும் வைக்கின்ற காற்றுக்குமிழ்கள் நிறைய விவரிக்கும்.

மிக்க நன்றி முனைவர்.குணசீலன்.

ரமணி சார், தங்கள் கருத்துரைகள் ஒரு ஆணின் பண்பட்ட பார்வையினை இங்கு பதிவு செய்கின்றன. மிக்க நன்றி.

குமிழ்களுக்கான வரவேற்பு குழந்தைகளிடம் மட்டுமே கிட்டுகிறது. அந்த மனம் நமக்கிருந்தால், விலை மதிப்பில்லாத புன்னகையினை எப்போதும் அணிந்திருப்போமே என்று தோன்றியது. பெரியதும் சிறியதுமான குமிழ்கள் சந்திக்கும்போது விலகிவிடுகின்றன அல்லது விட்டுக் கொடுத்துவிடுகின்றன. எப்போதுமே மோதிக் கொள்வது சமமானவைதான். இல்லறத்திலும் இதுதான் நடக்கிறது. கவிதையின் கருவை குறிப்பிட்டமைக்கு நன்றி கீதா.

அழகான கவிதை..வாழ்த்துக்கள் //பாராட்டிற்கு நன்றி தோழி.ராஜேஸ்வரி.

அல்குக்கவிதை. அருமை.

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு.முத்தரசு.

''...இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது...''
''...நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை...''
''..ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !...''
Nalla vatikal vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
//பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்//
அருமையான வரிகள்!!

அன்பு மட்டுமே நிறைந்த நெஞ்சம் இப்படித்தான் பின் விளைவின் பயமின்றி, கள்ளமின்றி அன்பைத்தேடி சிற‌கடித்துப் பறக்கும்!

அழகிய கவிதை!!

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

Nalla vatikal vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com //வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.

நன்றி மனோ மேடம். தொலைந்துபோன பிள்ளை உள்ளம் தேடுவதுதான் வாழ்க்கையின் நோக்கமாகிறது.

மிக்க நன்றி திரு.குமார்

அழகான கவிதை ,பகிர்வுக்கு நன்றி

தமிழ் மணம் 11