மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

  


















வெள்ளை மனமும் 
     முல்லை மணமுமாக
வீதியெங்கும் திரிந்த
     என் மூதாதையர்
அள்ளி அள்ளி வைத்த
     வள்ளல் கதையெல்லாம்
கொள்ளியிட்டு மறைந்தன.
     இழந்ததைத் தேடி
கோவில் வாசலில்
     முக்காடிட்டு அமர்ந்தன. 


தலையெழுத்து மாற்றம்
    தலைமுறைக்கும் மாற்றம்!
கம்பன் இளங்கோவடிகள்
   கர்வம் கொண்டு சொல்லிய
எந்தை பழந்தமிழ் கதைகள்
    மானுடம் மறையுமுன்
தானாய் மறைந்தனவோ!
    முடங்கிய மனம் சென்றது

களம் இழந்த பறவையாய்
    வான்வெளியைத் தேடி்!

ஆதி முதல் வாசம் கொண்டு
       பல சேதிகள் சுமந்து
இன்று காறி உமிழ்ந்த
      எச்சில்கள் பட்ட காற்று
சொல்லிப் போன செய்தி...
     அழித்தொழிக்கும் வித்தையில்
காலதேவனின் கறார் விதிகள்
    மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
     மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் என்றது
.

---- முதியோர் இல்லத்திலிருந்து....

9 comments:

மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் //
very nice.

மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் >>>>

இந்த உலகம் இருக்கும் வரை இந்த கருத்து சாத்தியமே!

நல்ல கவிதை. சிந்திக்கத்தூண்டும் கருத்துக்கள்.
//மானுடம் புதிதாய் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கும் >>>>// ஆம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

அந்த நம்பிக்கையில்தான் உலக உருண்டை சுற்றிக் கொண்டிருக்கிறது. நன்றி திரு.பிரகாஷ்

பாரட்டுக்களுக்கு நன்றி சார்.

வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுந்தச் சொல்கின்றன ஆதங்கத்தை. களம் இழந்த பறவை.... தலைப்பொன்றே போதும், பரிதவிக்கும் உளத்துயரைப் பிளந்துகாட்டுதற்கு.

மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் என்றது.//
பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் புதிதாய் தழைத்துப் பிறக்கட்டும் மானுடம்.

பாராட்டிற்கு நன்றி கீதா.