கொதிக்கும் எண்ணை கொப்பரை சட்டி
சாட்டை சவுக்கடி புராணகாலத்து பழசு
இப்பொதெல்லாம் உடனடி நீதிதான்
கத்தி எடுத்தால் கத்திதான் நீதிபதி
நிழல் இல்லா வெட்ட வெளியில்
கொதிக்கும் மணலின் சூடு பரவ
குடை தேடுமா? செருப்பை தேடுமா?
அநியாயமாய்
என்றைக்கோ வெட்டி போட்ட மரம்
நினைவில் நீதிபதியாய் நிற்கிறது
தன்னெஞ்சு அரித்தல் இதுதான்
மனிதனின் நீதிமன்றத்தை மறுக்கலாம்
கடவுளின் தண்டனைக்கு மாற்று...?
கவிதாவின் நிலையும் அதுதான்
நடப்பின் வலியைவிட
உண்மை ஊசியாய் குத்தியது
வசு அத்தனை தரம் தாழ்ந்தவனா
இல்லை அவள்தான் தாழ்த்தியது
யாருமில்லாத பூலோகம் வேண்டி
அவளின் விருப்பமாக அவன் ஆட
முன்பு அவள் எடுத்த ஆயுதம்
அடுத்தவள் கையில் சிக்கியது
குழந்தை பேற்றிற்கான இடவெளியில்
கட்டுப்பாட்டு விசை திசை மாறியதே!
மனிதனை மனிதனாக்க மனிதர் தேவை
போற்றவோ அல்லது தூற்றவோ
அவளுக்கான நியாயத்தை பேச
வெற்று பூமியில் யாருமில்லை
வாய் வார்த்தையாக செயலாக அவளால்
பிரித்து போடப்பட்ட அவன் பெற்றோர்
'அவர்கள்' சொன்னால் கேட்பானா?
அவளுக்கும் அதில் விருப்பமில்லை
செயலும் பலனும்அவளுடையது
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் எடுக்கின்ற முடிவைதான் கவிதாவும் எடுக்கிறாள். நீதிமன்றம், விவாகரத்து... என மாறிவிடும். பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இளையவர்களுக்கு இன்றைய நடப்பே பெரியதாகிவிடும். திருமண வண்டி அவ்வப்போது குடை சாயும்போது நிமிர்த்தி வைக்க அனுபவமிக்க பெரியோர் தேவை. அறுபதுகளில் ஓடி கொண்டிருக்கும் பழைய வண்டிகளின் கதையும் இதுதான். அனுபவத்தால் மட்டுமே ஆழிப்பேரலையைகூட ஆரவாரமில்லாமல் அடங்கமுடியும்.
அமெரிக்கா! கனவா, களவா?
23 hours ago
