மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

கரையோரம் ஒரு விதை விழுந்தது
      ஆற்று நீரும் இதமான வெயிலும்
அதனை அழகாகவே வளர்த்தன
      பெரியதாய் வேர்பிடித்து வளர்ந்தபின்
கிளைகளில் பறவைகளின் கூடு
      விடியலை இசைத்து வரவேற்றது
விழுதுகள் சின்னதாக வந்தன
     அவற்றின் பாரமும் கூடியது
சற்று நாட்கள் சகித்து நின்றது
   
விழுதுகள் பூமி தொட்டுவிட
     பொறுமை காத்து வளர்ந்தன
எத்தனையோ புயல் தாண்டி
     விழுதையும் சேர்ந்து தாங்கியது
வேர் விட்ட விழுதுகள் நின்றன
    சில மரத்தை ஒட்டி பின்னி பரவின
மரத்திற்கும் விழுதிற்கும் உறுதிகூடியது
    இன்னும் பெரியதாக கிளைவிட்டது


மருந்தானது, பூசனைக்குரிய பொருளானது
    பல உயிர்களுக்கு புகலிடமானது
வாழ்த்து பெற்ற விருட்சமானது
     மரங்களுக்கு மனித நாகரிகம் தெரியாது
முதியோர் இல்லம் இல்லை போலும்
     தள்ளி வைத்தல், பிரிந்து செல்லுதல்
எந்தவித துக்க நிகழ்வும் இன்றி
    விழுதுகள் சூழ்ந்து ஒன்றாக கலந்தன


சிறு துளிகள் சேர்ந்து குளமாகியது
       முதல் துளி பிரித்தறிய முடியாமல்
நீர் வளையத்தில் ஒன்றாக கலந்தது
 அது போல்.....
வயதான மரத்திற்கு முடிவு இல்லாமல்
விழுதுகள் சூழ தல விருட்சமானது


இப்போது கேள்வி என்னவென்றால்
       கவிதையின் தலைப்பு பெருமை
பொறுமை காத்த மரத்திற்கானதா?
       கடமை தவறாத விழுதுகளுக்கா?

0 comments: