மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இரண்டு நாள் முந்தைய செய்தி
      மதுரை தாயம்மாள் பற்றிய தகவல்
இருந்தும் இல்லாமல் போனவள்
    பத்து பெற்றும் பராமரிப்பு இல்லை.
சொத்து தந்தும் சொந்தம் இல்லை
    பெற்ற பிள்ளைகள்கூட கை விட்டனர்
பாட்டியின் வயது எண்பத்து ஐந்தாம்
    அதிகாரிகள் மனது வைக்க வேண்டுகோள்
கண்ணில் பரிதவிப்புடன் பாட்டியின் படம்
     புலியை தத்து எடுக்கும் நாட்டில்
விலங்கைவிட மனிதன் மட்டம்!
 

தலத்தில் மாண்புயர் மக்களை பெற்றிடல் 
        சாலவே யரிதாவதோர் செய்தியாம்! 
                                                                          - பாரதியார் 

       இனி என்ன சொல்வது. சாலையோரத்தில் பேருந்து நிலையங்களில் கையேந்தும் முதியவர்களை பற்றி பேசப்போவதில்லை. அதை நியாயப்படுத்தவும் போவதில்லை. என்னுடைய பார்வையெல்லாம் பெற்றபிள்ளைகள், உற்றோர் என பலர் இருந்தும் இல்லாமல் தனித்து விடப்படும் முதியவர்களை பற்றியதே. இருந்தும் இல்லாமல் என்பது பொருளாதாரத்தை பற்றி மட்டுமல்ல, உலகத்தின் பார்வையில் அவர்களுடைய நிலை பற்றியும்தான். என்னதான் வருங்காலத்தின் தேவையறிந்து சேர்த்து வைத்திருந்தாலும் பிள்ளைகளிடம் மறுக்க இயலாமல் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம் என்றால் சொத்தை பிரித்து தராத காரணத்திற்காக அவர்களை திரும்பிகூட பாராமல் இருப்பது வன்கொடுமையல்லவா? சட்டம் போட்டால் பாசம் கிட்டுமா? 


        "பாசம் உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்!" கவிஞரின் பாடல் உண்மையல்லவா. எங்கேயோ எப்போதோ தொலைத்து விட்ட எம்சமுதாயத்தின் மாண்புகளை எப்படி உயிர்பிப்பது? 

0 comments: