மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

தொலைதூர தொடுவானம்
கண்ணில் வெற்றிடத்தை காட்ட
முட்டிக் கொள்ளும் தூரத்தில்
வாழ்க்கையின் கேள்வி
அடுத்தது என்ன?....
அதை ஆண்டவன்தான்
பார்த்துக் கொள்ள வேண்டும்

எங்கோ ஒரு மூலையில்
நினைவு துளிர்த்தது
கடவுள் எங்கேயிருக்கிறார்?
கோவிலில்...  பூசையில் ....
மணியோசையில் .... மந்திரத்தில்...
எதிலும் காணாமல்
குருவைத் தேடி சென்றான்
கண் திறந்த குருவும்
காட்டிற்குச் செல் என்றார்
வீட்டிலிருந்த மனிதன்
காட்டிற்கு கிளம்பினான்

கடைகோடிக்கு சென்றபின்
கையில் கோடரியுடன்
வரிசையாய் மரங்களின் மீது
கவனமான பார்வையுடன் வந்தான்
கண்ணன் விறகு வெட்டியாய்,

கடவுள் நீயா என்ற கேள்விக்கு
கள்ளச்சிரிப்புடன் ஆம் என்றான்
வியப்பில் கேள்வி எழுந்தது
கையசைவில் எல்லாம் கிட்டும்!
ஏன் விறகு வெட்டும் வேலை?


''வாழ்ந்து பார்த்தால்தான்
வாழ்க்கை ரகசியம் புரியும்
ஏனென்றால்...
அனுபவம் என்பதே நான்தான்"

 

 

16 comments:

நல்லா தொடங்கியிருக்கிங்க....

முடிவை சொல்லிடுங்க...

எனது முதலிரவு அனுபவங்கள்...

http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html

நல்லாதானே போயிட்டு இருந்துச்சி.....ஏன் கடைசியா முழுங்கிட்டிங்க தொடரும்னுட்டு......

புது முயற்சி நல்லாயிருக்கு....

வணக்கம் வருகைக்கு நன்றி. கவிதை கண்டுபிடிக்கவில்லையே.

வணக்கம் திரு.மனோ. கவிதையை முடிக்க மாட்டீர்களா.

கையசைவில் எல்லாம் கிட்டும்!//
If so that is not valuable.

என்னங்க இப்படி சொல்லிப்புட்டிங்க... கவிதைய முடிக்கனுமா....

எனது வலைப்பூவில்: மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ

//இராஜராஜேஸ்வரி said...

கையசைவில் எல்லாம் கிட்டும்!//
If so that is not valuable.//

விடைக்கு ரொம்ப அருகில் வந்திட்டீங்க ராஜேஸ்வரி.

ஆமாம். வருகைக்கு நன்றி திரு.பிராகாஷ்.

//கையசைவில் எல்லாம் கிட்டும்!
ஏன் விறகு வெட்டும் வேலை?//

அதானே ஏன்? ஏன் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறோம்? நல்ல கவிதை

கையசைவில் கிட்டும்
எதுவும் ருசிப்பதில்லை
உழைத்து வாழ்தலே
சாலச் சிறந்தது

விடை சொல்லாமல் தப்பித்துவிட்டீர்கள்.....? நன்றி திரு.சண்முகவேல்

ம்.. இதுவும் கொஞ்சம் சரிதான். நன்றி திரு.எல்.கே.

konjam, kavingar kannadasan avargal ezhuthiya
kavithaiyin saayal theriyarathe madam?

சாயல்தானே, காப்பி இல்லை அல்லவா? நல்லவிசயங்கள் மனதிற்குள் நிரந்தரமான இடத்தை பிடித்துவிடும். கண்ணதாசனின் கவிதைகளும் அப்படித்தான். நன்றி ராஜி.