மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நினைவு பதிவுகளில் மங்கலாய்
   கொல்லை புறத்து கொய்யாமரம்!
ஓட்டுத் தாழ்வாரத்தில் பரவி,
   காயாகவும் பழமாகவும்...
பெரியதும் சிறியதுமாயும்...
   இலைமறைவில் காய்த்து...
திக்கெங்கும் வாசம் பரப்பி
   குட்டி குட்டி அணில்களை
விருந்தோம்பி அழைத்திட...

இரவிலோ பகலிலோ அல்லது
   நான் பள்ளியில் இருந்தபோதோ
பழுத்து பசியாற்றிய கதையை
   மறுநாள் வெற்றுகூடாகி நிற்கும்
பழப்படிவம் எடுத்து சொல்ல,
    எனக்கு எதிரியாய் அணில்!
கூடையில் தூக்கிச் சென்று
    தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
   ஒழித்துக் கட்டலாமா? என்று
நித்தம் தாயிடம் ஆலோசனை.


அணில் இரக்கப்பட்ட சில நாள்
   பழுத்த கொய்யா பழம் கிட்டவும்
அன்று மட்டும் கீச் கீச் குரலில்
    நட்பு பாராட்டி பழம் விடும்
நானும் கொலை வெறியை
   அழித்து விட்டு மரம் ஏறுவேன்
மறுபடியும் கதை தொடர....
    எதிரியா? நண்பனா? கேள்வி
என் பால பருவத்தை கரைத்திட,

இன்றும்கூட ஆயாசமான நாளின்
     அழுத்தம் கொண்ட இரவினில்
அன்னையின் வருடல் நாடி
    மூச்சு எடுத்து உறங்கும்போது
தங்க கொய்யாப் பழமும்
     வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.




15 comments:

ம்.... பரிவு கலந்த கவிதை..
வாழ்த்துக்கள்..

திரட்டிகளில் இணைப்பு கொடுங்கள்...
அதிகம் வாசகர்கள் கிடைப்பார்கள்...

தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.
அருமையான கனவு.வாழ்த்துக்கள்.

மனதை கவர்கிறது.நன்று.எப்டி உங்களுக்கு இவ்ளோ கவித வருது!பொறாமையா இருக்கு!

//உறங்கும்போது தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து விடியலை தேடித் தருகின்றன.//

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

இணைத்துள்ளேன் திரு.சௌந்தர். என் எழுத்தின் வயது 5 மாதங்கள் மட்டுமே ( அதற்கு முன் text book மட்டுமே போட்டுள்ளேன்.). பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இன்னும் நாட்களாகும். நன்றி.

//அருமையான கனவு// எனக்கும்தான் கண் விழித்த பின் அந்த நினைவுகள் மகிழ்ச்சிதரும்.. நன்றி ராஜேஸ்வரி.

//பொறாமையா இருக்கு! //இப்போதெல்லாம் இது நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். நன்றி திரு.சண்முகவேல்.

//வை.கோபாலகிருஷ்ணன் said...

//உறங்கும்போது தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து விடியலை தேடித் தருகின்றன.//

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.//
நன்றி ஐயா. உங்கள் நினைவுகளிலும் இது போல் ஏதேனும் கனவுகள் உள்ளனவா?

அணில்களை தற்சமயம் காணவியலா ஏக்கத்தினை மனதோரம் எழச்செய்த அழகுக்கவிதை. கொல்லைப்புறக் கொய்யாமரத்து அணில்களோடு அம்மா வீட்டையும் நினைவுபடுத்திவிட்டீர்கள். அருமை சாகம்பரி.

அப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு பழமரம் இருக்கும். இள வயது நினைவுகளுடன் இது சம்பந்தப்பட்டிருக்கும். நன்றி கீதா.

இதா வந்துட்டோம்ல....

வார்த்தைகளில் அணிலின் மென்மை...
ஆனால் அணிலின் கோடுகளைப் போலவே நினைவுகளை கீறுகிறது.

சிசு said...
இதா வந்துட்டோம்ல....

வார்த்தைகளில் அணிலின் மென்மை...
ஆனால் அணிலின் கோடுகளைப் போலவே நினைவுகளை கீறுகிறது//

வணக்கம் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி .

ஹாய் அணில்குட்டி
உன்னை பத்தி கவிபாட யாரும் இல்லை
என்ற கவலை எனக்கு இருந்த போது
இப்போது கவலை கரைந்து விட்டது ..so nice

நன்றி திரு.சிவா.