மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.       

     வாழ்க்கையின் அர்த்தமே உறவுகளை பேணுதல்தான். சமுதாயம் என்கிற ஒன்று உருவானதே இதற்காகத்தான். மனித உறவுகள் புனிதமானவை, வெற்றிகரமான வாழ்க்கை என்பது சுற்றம் சூழ வாழுதல்தான். புரிந்து கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல குடும்ப வெற்றியின் ரகசியம். குடும்ப வரைபடத்தில் நம்முடைய இடத்தை உணர்வதும் , மற்றவர்களுடைய இடத்திற்குரிய மதிப்பை தருதலும்தான்.

     எனக்கும் இந்த விசயத்தில் பாரதியின் பார்வைதான். உறவுகள் ஒவ்வொன்றையும் கடவுளின் அவதாரமாகத்தான் நினைத்தார். அதனால்தான் கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் குழந்தை, கண்ணன் என் தோழன் ...... என ஒவ்வொரு உறவிலும் கடவுளைக் கண்டார். கண்ணன் என் மனைவி என்றோ கணவன் என்றோ ஏன் எழுதவில்லை என்று கேட்பீர்கள். உறவுகளின் மதிப்பு மனதிலிருந்து வருவது. ஆனால் கணவன் - மனைவி எனபது ஒரு பதவியாக மட்டுமே மதிக்கப் படுகிறது. தேவையில்லை எனில் பதவியை நீதி மன்றத்தை நாடி பறித்து விட முடியும். அதனால்தான் கண்ணன் என் காதலன் என்றும் கண்ணம்மா என் காதலி என்றும் தலைப்பிட்டார். உண்மையில் கணவன்-மனைவி என்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். இதே போலத்தான் சகோதரனின் இடத்தை தோழனுக்கு தந்தார் - இது என்னுடய தாழ்மையான கருத்து.

      நல்
இல்லம் நல்ல சமுதாயம். வெளி உலகத்தில் எப்படியிருந்தாலும் எனக்காக ஒரு அழகான குடும்பம் , இனிய நாட்களை தர காத்திருக்கிறது என்ற எண்ணமே காற்றில் ஏறி விண்ணையும் சாடும் வலிமையை தருமல்லவா. இந்த தொடரின் முன் வந்த ஆறு பதிவுகளும் சில விதி விலக்குகளை தவிர்த்து அனைவருக்கும் பொருத்தமானவைதான். இதனை சரிவர - இடம், பொருள், ஏவல் அறிந்து என்பார்களே அதுபோல் - பயன்படுத்திக் கொண்டு இனிய இல்லறம் காணுங்கள்.

             எவ்வுயிர் தன்னிலும் ஈசன் உள்ளானென
            எப்பொழுதுங் கதைப்பாய்- நன்னெஞ்சே
                                                        -மகாகவி பாரதியார்


இதுவரை இந்த தொடரில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி

 


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6  

3 comments:

good post

நன்றி திரு ஆர்.கே சதீஷ் குமார். மிக சிரமம் எடுத்து செய்த பதிவிற்கு கருத்து பதிவது , வெகுவான சன்மானம் கிட்டியது போல.

கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் always

azifair-sirkali.blog