மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


      நேற்றைய பதிவில் உடல் ரீதியான பிரச்சினையை சரி செய்யும் விதம் பார்த்தோம், இனி மனப்பதட்டத்தை குறைக்கும் நடைமுறைகள், வீட்டின் முன்னேற்றம், குழந்தைகளின் எதிர்காலத்திட்டம் ஆகியவற்றை உங்கள் மனைவியுடன் ஆலோசியுங்கள். தேவையில்லாத கவலைகள் பறந்து விடும். உங்களுக்கும் புதிய யோசனைகள் கிட்டலாம். பெண்களுக்கே உரிய நாட்களில் , முழு ஓய்வை தாருங்கள்.

   வீட்டில் இருக்கும் பெண் என்றால் புதிய வகை கலை பயிற்சிகளை அறிமுகப்படுத்துங்கள் ஓவியம் வரைதல், தையல் வேலை, இசைக் கருவிகள் இசைக்க கற்றுக்கொள்வது. இவை அவர்களுக்குள் புதிய உற்சாகத்தை உருவாக்கும். புத்துணர்வை வெளிப்படுத்துவார்கள். அலுவலகம் செல்பவர் என்றால் விடுமுறை நாட்கள் உற்சாகமளிக்ககூடியதாக திட்டமிடுங்கள். No Samayal Day, fruit night போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம்.

   எந்த பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய முகமாக ஆரம்பிக்கலாம். சிலர் சாதாரண விசயத்தைகூட திகிலூட்டும் பரபரப்புடன் ஆரம்பிப்பார்கள். அது போன்ற உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள் அல்லது தடுத்து வையுங்கள்.

    சாதாரணமாக நாம் பெண்கள் இருப்பதாக உணர்வது , அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாது போகும்போதுதான். அப்போதுதான் அவர்களுக்கான கவனிப்புகள் கிடைக்கும். அதனாலேயே சில சமயம் உடல் நலமில்லாமல் இருப்பதை விரும்புவார்கள். எதற்கு இவ்வாறு நடக்க விட வேண்டும், இது நம் தவறும் அல்லவா?. இந்த நிலை வராமல் தடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. இத்தனை கவனிப்பும் ஆண்களுக்கும் ஆண்ட்ரோஜன் குறைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் -  நாற்பதுகளில்தான்.  ஆனால், ஏதும் சொல்லாமலே இனிய புன்னகையுடன் இதற்கான கவனிப்புகள் ஆரம்பம் ஆகும்.


  விழுவதும் அழுவதும் வாழ்க்கை என்றால் தூக்கி விடுவதும் கண்ணீரை துடைத்து விடுவதும்தான் காதல். இது கணவன்-மனைவியிடையே கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆத்மார்த்தம் என்பதை வாழ்ந்த நாட்கள்தான் சொல்லும்.


மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... Part 2 

6 comments:

முக்கியமா, கணவர் தங்களை தவிர்க்கிரார்களோ என்றோ சந்தேகம் எழக்கூடிய நேரம் இது

உண்மைதான். இதனால் நிறைய தம்பதியினர் வாழ்க்கையை மௌனமாக்கிக்கொண்டு வெற்று சிரிப்பில் வாழ்கின்றனர். அதனால்தான் "உண்மையான வெள்ளிவிழா" என்று குறிப்பிட்டேன்.

முன்பெல்லாம் பெண்கள் இந்த வயதை எட்டும்போளுது அநேகமாக மாமியார் ஆகும் நிலையில் இருப்பர் அல்லது மாமியார் ஆகி இருப்பார்கள். ஆனால் இன்றுக் கல்யாணமே முப்பதில்தான் நடக்கிறது. எனவே இந்த சமயத்தில் அவர்களை புறக்கணித்தால் குழந்தைகளின் வாழ்வும் பாதிக்கும்

இதுவும் உண்மையே. குழந்தைகளின் நலத்தை மனதில் கொண்டுதான் இந்த பதிவினை எழுதினேன். நல்ல மாணவர்களை இழந்த வருத்தம் எனக்கு உண்டு.

ஓஹோ டீச்சரா நீங்கள் ? அப்ப ஜாக்கிரதையாக கமென்ட் போடணும்

உண்மையில் ஆசிரியர்தான் கருத்து கேட்க பயப்பட வேண்டும். feed back வாங்கும்போது தெரியும்.