மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


அப்பாவிற்கும் அவனுக்குமான
உரசல் ஆரம்பித்த நொடி
சபிக்கப் பட்ட வேளையோ
முதல் இடைவெளியில்
சின்னதாய் எழுந்த வலி
எங்கே என்று சொல்ல.....?
விழுந்த பொழுதெல்லாம்.....
தூக்கி வாரியணைத்த கரங்கள்
ஆறுதலாக பேசியது நினைவில்லை
ஆனாலும் அன்றைய நிம்மதி
நெடுநாள் மறக்கவில்லை!

தாயின் வயிற்று குரங்கு குட்டி
தவறி விழுந்தால் தனிதானாம்
"நான் என்ன குரங்கு குட்டியா?"
மடியில் அமர்த்தி கதை சொல்லி
அம்மாவிடம் சலுகை வாங்கி
துண்டு விழுந்த நிதிநிலையிலும்
இரண்டு சக்கர வாகனம் வந்தது
அளவாய் பிடித்து செலவு செய்து
அழகாய் ஒரு இனிய வீடு
இன்னும் அழகாய் அவன் பெயரில்
அது மேலும் அழகானது செல்லமாய்
நொடிக்கொருமுறை அவனை அழைத்ததில்
இதெல்லாம் குரங்கிடம் உண்டா?

எல்லை தாண்டி வந்த
அந்நிய நாட்டுப் பார்வை எதற்கு?
விளக்கமாக பேசியிருக்கலாமே.....
காரணங்கள் கூறி இருக்காலாமே......
காதல் என்ன பொல்லாததா?
அவன் வயதிற்கு அல்லாததாகட்டும்
இப்பாது முக்கியமாய் தோன்றவில்லை
ஆனால் , வீணாய் போயிற்று ......
தண்ணீருக்குள் மூழ்கியது போல்
கடைசி மூச்சிற்காக தவித்து....
சற்று நேரம் முகம் பார்த்தபோது
- இல்லை! இல்லை! இவர் வேறு
மனதில் எழுந்தன வார்த்தைகள்
என்னவோ இதயத்தில் கழன்றது


சட்டென பிராணவாயு கிட்டியது
"இந்த அப்பாக்களே இப்படித்தான்?"
இனி... இது பற்றி
ரொம்பவும் கவலையில்லை
அண்ணாந்து வெறிக்கவும் இல்லை
அவரை அடுத்த முறை பார்க்கும்போது
கண்களை சந்திக்கப் போவதுமில்லை
ஏனெனில் .....
அவன் வளர்ந்து விட்டான்...!



0 comments: