மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

          இந்த சமயத்தில் மனைவிக்கு உதவுவதில் முக்கிய பொறுப்பு கணவரிடம்தான் உள்ளது. ஏனென்றால், குடும்பத்தின் உள்ள மற்றவர்கள் இந்த விசயத்தை சரிவர புரிந்து கொள்ள முடியாது. பெரியவர்கள் - ஏற்கனவே தங்கள் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பர். சிறியவர்களுக்கு வெளிப்படையான வியாதிகளான காய்ச்சல், தலைவலி போன்ற வழமையானவற்றைதான் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், இந்த பிரச்சினையில் ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதுபோல தெரியும், அப்போது சுறுசுறுப்பாகவும் திடீரென சோர்வடைத்தும் விடுவதால் புரிந்து கொள்ளுதல் சிரமம். எனவே 75 சதவீதம் இதனை கணவர்தான் சரிசெய்ய வேண்டும். மற்றவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுத்தரவும் அவர்களால்தான் முடியும். எப்படி?

      முதலில் உண்மையான கவனிப்பை மனைவிக்குத் தரவேண்டும். இத்தனை நாள் கடந்து வந்த பாதையின் கடினத்தை தாண்டி "என்னை ஜெயிக்க வைத்தது என் மனைவிதான்" என்ற புரிதல் வேண்டும். இதனை மனதில் பதிய வைத்தால்தான் நடவடிக்கையிலும் இதமாக வெளிப்படும். அந்த சமயத்தில் பொதுவாக கணவருக்கும் நாற்பதுகளில் இருப்பர். ஆனால் உடல் நலம் நன்றாகவே இருக்கும். உடல் ரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண்ணைவிட ஆணுக்கு இது போன்ற பிரச்சினைகள் காலம் தாழ்த்தியே தலை துக்கும்.

       கவனிக்க வேண்டும் என்றால், இனிமையாக பேசுவது அல்ல. இந்த நிலையில் தேவையான உதவியை செய்யாமல், வார்த்தைகள் மட்டும் பலனளிக்காது. "இப்படியேதான் இத்தனை நாளும் ஏமாத்திக் கொண்டிருந்தீர்களா?" என்று திட்டுதான் விழும். ஏனெனில் சீரணக்கோளாறு சத்து குறைபாடு ஆகியவற்றால் , எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் . இது போன்ற வசவுகள் கொஞ்சம் குழந்தைகளுக்கும் கிட்டும். நீங்கள் நிலைமை புரியாமல் பதில் பேசினால் வீடு ரணகளம் ஆகிவிடும். சத்து குறைவினை சரி செய்தால் இவை சரியாகிவிடும்.

      அதற்கு சத்து பானங்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் இந்த வயது பெண்களுக்கான சிறப்பு பானங்களை பிரபல தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை நல்ல பலனைத் தருவதை கவனித்துள்ளேன். சூப் வகைகள் சமயம் கிட்டும்போதெல்லாம் அருந்த வையுங்கள் , முடியவில்லை எனில் இதற்கும் ரெடிமேட் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். . இரத்த சுத்திக்கு பப்பாளி, கொய்யா, திராட்சை போன்ற பழங்கள் அடிக்கடி சாப்பிட வைக்கவும். கலோரி பற்றிய கவலையெனில் பேபி கார்ன், முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட வைக்கலாம். இந்த அவசர யுகத்தில் இவற்றை , தனக்காக செய்து கொள்ளமாட்டார்கள் எனில், உங்களுடைய தேவைகளாககூட இவற்றை சேர்க்க வைக்கலாம். அசைவ எனில் சுவரொட்டி போன்றவற்றை சேர்க்கலாம். எந்த வேளையும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

மருத்துவரிடம் செல்லும்போது கவனிக்க வேண்டியது , ஹார்மோன் மருந்தை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். அது பிற்பாடு பிரச்சினையை ஏற்படுத்தும். அல்சர் போன்றவற்றிற்கு சரியான மருந்தை நேரப்படி எடுத்துக் கொள்ள செய்யுங்கள். இரவில் முட்டை, மைதாமாவு, ரவை போன்றவற்றால் செய்த உணவுகளை தவிர்க்கவும். பால் இரண்டு கோப்பையாவது தினமும் குடிக்க வேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவற்றால் உடல் நிலை வெகுவாக தேறிவிடும். உங்களுடைய நடவடிக்கைகளில் குழந்தைகளும் சூழ்நிலையை புரிந்து கொள்வர்.

                                                                                         -இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்
         
 
 மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண .. part 1

7 comments:

அருமையா இருக்குதுங்கோ....

நல்ல நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். முப்பதுகளில் நுழையும் தம்பதியருக்கு உபயோகம் ஆகும்

மிக்க நன்றி திரு.மனோ

நன்றி திரு.எல்.கே. பதிவுலகிலகில் இருப்பவர்கள் உலகத்தின் தொடர்பில் இருப்பவர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகளில் நீங்கள் ஆலோசனை சொல்ல இந்த பதிவுகள் பயன்படும் என்று நினக்கிறேன்.

கண்டிப்பா. ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும்,மற்றவர்களுக்கு உதவி செய்ய கைக்கொடுக்கும்

எல் கே சார் தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததன் பெயரில்
இன்றுதான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.இத்தனை நாளாக
இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேனே என கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் இப்பொழுதாவது
அற்ய முடிந்ததே என்று சந்தோஷப் படும் அளவிற்கு உங்கள் பதிவின் விஷயங்கள் உள்ளன.
தொடர வாழ்த்துக்கள்.முடிந்தால் எனது பதிவிற்கும் வருகை தரவும்.

நன்றி ராஜி. உங்கள் வார்த்தைகள் என்னை இன்னும் கவனப்படுத்துகின்றன. உங்கள் கருத்துரைக்காக இனி வரும் பதிவுகள் காத்திருக்கும். நன்றி.